உக்ரைனில் ஒரே குழியில் 400 சடலம்
2022-09-17@ 02:17:16

இஷியம்: உக்ரைனில் ரஷ்யாவிடம் இருந்து மீண்டும் கைப்பற்றப்பட்ட இஷியம் பகுதியில் 400க்கும் மேற்பட்ட சடலங்கள் குவிக்கப்பட்ட பிரமாண்ட மரண குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையே பிப்ரவரியில் தொடங்கிய போர், 6 மாதங்களாக நீடிக்கிறது. உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றின. இந்த பகுதிகளை 7 மாதங்களுக்கு பிறகு உக்ரைன் படைகள் தற்போது மீண்டும் வசப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், ரஷ்ய படைகளிடம் இருந்து மீட்கப்பட்ட இஷியம் பகுதியில் நேற்று முன்தினம் பெரிய மரண குழி கண்டுபிடிக்கப்பட்டது. இதில், 400க்கும் மேற்பட்ட சடலங்கள் இருக்கின்றன. மேலும் 30க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்களின் சடலங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. துப்பாக்கி குண்டு, வான்வழி தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் இங்கே புதைக்கப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது. ரஷ்ய படைகள் இந்த படுகொலைகளை செய்ததாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டி உள்ளார்.
மேலும் செய்திகள்
சீனாவிடம் கடன் வாங்குவதில் வங்கதேசம் கவனமாக உள்ளது: ஷேக் ஹசீனா தகவல்
மோடி கொடுத்த பரிசு பற்றி கணக்கு காட்டவில்லை: டிரம்ப் மீது குற்றச்சாட்டு
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு ரூ.24 ஆயிரம் கோடி கடனுதவி: சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்
இங்கிலாந்து பிரதமரிடம் இந்திய மாணவர்கள் மனு
இந்திய தூதர் நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் வன்முறை
ரயில் நிலையத்தில் சரிந்து விழுந்து பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!