தூத்துக்குடியில் 5 குழந்தைகளின் தாயை கடத்தி பலாத்காரம்: ரவுடி உள்பட இருவர் கைது
2022-09-17@ 00:30:38

தூத்துக்குடி: தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்தவர் முனியசாமி மகன் முருகன் என்ற கட்டை முருகன் (27). இவர் மீது தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிரபல ரவுடியான முருகனும், இவரது நண்பரான கோகுல்ராம் (19) என்பவரும் பைக்கில் தாளமுத்துநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக நடந்து சென்ற 40 வயது பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி வலுக்கட்டாயமாக பைக்கில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர். 5 குழந்தைகளின் தாயான அப்பெண்ணை ஒரு வீட்டில் அைடத்து வைத்து முருகன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மறுநாள் அவரை அவரது வீட்டின் அருகே இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில் தன்னுடன் வருமாறு கோகுல்ராமும் மிரட்ட பாதிக்கப்பட்ட பெண், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், முருகன் என்ற கட்டை முருகன், கோகுல்ராம் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர். முருகன், போலீசார் பிடியில் இருந்து பைக்கில் தப்பிச் செல்லும்போது தவறி விழுந்து கையை முறித்துக் கொண்டான்.
Tags:
Thoothukudi 5 children mother abducted raped rowdy two arrested தூத்துக்குடி 5 குழந்தை தாயை கடத்தி பலாத்காரம் ரவுடி இருவர் கைதுமேலும் செய்திகள்
ஈமு கோழி மோசடி வழக்கில் இயக்குநருக்கு ரூ.2.83 கோடி அபராதம்
காரைக்கால் அலுவலகம், வீடுகளில் சிபிஐ ரெய்டு உதவி பதிவாளர், உதவியாளர் கைது: பலகோடி மதிப்பு ஆவணங்கள் சிக்கியது
எஸ்ஐயை கத்தியால் குத்திய போலீசுக்கு 5 ஆண்டு சிறை
தொழில் போட்டியால் தம்பதியை தாக்கி கொலை மிரட்டல் பாஜ பிரமுகர்கள் 3 பேர் கைது
வீடு யாருக்கு சொந்தம் என்ற தகராறில் விபரீதம் துப்பாக்கியால் சுட்டு அண்ணன் கொலை: தம்பி வெறிச்செயல்
மாதம் 15% வட்டி தருவதாக ரூ.4,400 கோடி வசூலித்து மோசடி ஹிஜாவ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் கைது: பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என போலீசார் அறிவிப்பு
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!