அடுக்குமாடி குடியிருப்பின் சமையலறையில் இன்டர்நெட்டில் பார்த்து கஞ்சா செடி வளர்ப்பு: க.காதலியுடன் இன்ஜினியர் கைது
2022-09-16@ 18:02:14

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்பின் சமையல் அறையில் கஞ்சா செடி வளர்த்து வந்த சாப்ட்வேர் இன்ஜினியர், அவரது கள்ளக்காதலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கேரளாவில் கஞ்சா, பிரவுன்சுகர், எம்டிஎம்ஏ உள்பட போதைப்பொருள் விற்பனையும், பயன்பாடும் கடுமையாக அதிகரித்து வருகிறது. வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு பெருமளவு போதைப்பொருள் கடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொச்சியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது ஒரு குடியிருப்பில் கஞ்சா செடி வளர்க்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அந்த குடியிருப்பின் சமையலறையில் ஒரு மண் சட்டியில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டது தெரியவந்தது. 4 மாதமான அந்த செடி ஒன்றரை மீட்டர் உயரம் இருந்தது. செடிக்கு காற்று கிடைப்பதற்காக அதன் அருகில் சிறிய மின்விசிறியும், வெளிச்சத்திற்காக எல்இடி பல்பும் பொருத்தப்பட்டிருந்தது.
கஞ்சா செடியை கைப்பற்றிய போலீசார், அந்த குடியிருப்பில் வசித்து வந்த பத்தனம்திட்டா மாவட்டம் கோன்னி பகுதியை சேர்ந்த ஆலன் (26) மற்றும் அவரது கள்ளக்காதலியான காயங்குளத்தை சேர்ந்த அபர்ணா (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர். கஞ்சா செடியை வளர்ப்பது எப்படி? என்பதை இன்டர்நெட்டில் பார்த்து 2 பேரும் தெரிந்து கொண்டு உள்ளனர். ஆலன் கொச்சியில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். விசாரணைக்குப் பிறகு 2 பேரையும் போலீசார் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
ஒன்றிய தகவல் ஆணையம் உத்தரவு ரத்து பிரதமர் மோடி கல்வித் தகுதி தகவல் தர வேண்டியதில்லை: டெல்லி முதல்வருக்கு ரூ.25,000 அபராதம் குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ராமநவமி கலவரம் மேற்கு வங்கத்தில் 144 தடை உத்தரவு அமல்: உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு
0.1 முதல் 0.7 சதவீதம் வரையிலும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயர்வு
கொசுவர்த்தி சுருளால் தீ பற்றி 6 பேர் பலி
தற்கொலை எண்ணத்தை மாற்ற ராகுல் காந்திதான் காரணம்: ரம்யா உருக்கம்
பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு தேர்தல் ஆணையத்திடம் ஆவணங்கள் தாக்கல்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!