தொழிலதிபர் வீட்டை உடைத்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை; நேபாள காவலாளிக்கு வலை
2022-09-16@ 03:09:33

சென்னை: ராஜா அண்ணாமலைபுரத்தில் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற நேபாள நாட்டை சேர்ந்த காவலாளியை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பிஷப் கார்டன் பகுதியை சேர்ந்தவர் பன்சிதர் குப்தா (45). தொழிலதிபரான இவர், பாரிமுனை பகுதியில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இனிப்பகம் மொத்த விற்பனை கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்று முன்தினம் பன்சிதர் குப்தா கடைக்கு சென்று விட்டார். இவரது தாயார் மஞ்சு குப்தா மற்றும் நேபாள நாட்டை சேர்ந்த காவலாளி ராஜன் (எ) திபேந்திரா ஆஜி (20) ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.
மாலையில், மஞ்சு குப்தாவும் வீட்டை பூட்டிவிட்டு பாரிமுனையில் உள்ள கடைக்கு சென்று விட்டார். பின்னர், பன்சிதர் குப்தா வீட்டிற்கு வந்து பார்த்த போது, பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே வீட்டின் காவலாளி ராஜனை தேடிய போது, அவர் மாயமாகி இருந்தார். வீட்டிற்குள் சென்று முதல் மாடிக்கு சென்று பார்த்தபோது, அங்குள்ள படுக்கை அறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.10 லட்சம் ரொக்கம், 10 தங்க காசுகள், 6 மோதிரம், 3 செயின் என ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகள் மாயமாகி இருந்தது.
இதுகுறித்து தொழிலதிபர் பன்சிதர் குப்தா அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். பின்னர் கொள்ளை குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், பணியில் சேர்ந்த 2 மாதத்தில் நகை மற்றும் பணத்துடன் மாயமான நேபாள நாட்டை சேர்ந்த காவலாளி ராஜனை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
பெங்களூருவில் 19 வயது பெண்ணை காரில் கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 இளைஞர்கள் கைது
பெண்ணுக்கு தொல்லை டிரைவர் கைது
ரூ.10 தர மறுத்தவரின் கழுத்து அறுப்பு
வீடு வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி ரூ.10 லட்சம் நூதன மோசடி: ஆந்திர வாலிபர் கைது
செம்மஞ்சேரியில் பயங்கரம் காலை பிடித்து சுவரில் அடித்து 2 மாத குழந்தை படுகொலை: கொடூர தந்தை கைது
துபாயிலிருந்து 2 கிலோ தங்கம் கடத்தல் கொள்ளை நாடகமாடிய ‘குருவி’யை லாட்ஜில் அடைத்து சித்ரவதை: நிறுவன உரிமையாளர்கள் 4 பேர் கைது
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!