ரூ.500 கோடி முறைகேடு மாஜி அமைச்சர் கைது
2022-09-16@ 02:29:51

அகமதாபாத்: குஜராத்தில் 1996ம் ஆண்டு சங்கர்சிங் வகேலா முதல்வராக இருந்தபோது அவரை அமைச்சரவையில் விபுல் சவுத்ரி உள்துறை அமைச்சராக இருந்தார். பின்னர், குஜராத் மாநில கூட்டுறவு பால் விற்பனை சம்மேளனத்தின் தலைவராக இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன் மேஹ்சானா மாவட்டத்தில் உள்ள துாத்சாகர் பால் பண்ணை தலைவராக இருந்தார். அப்போது, அந்த நிறுவனத்தில்ரூ.500 கோடி முறைகேடுகள் நடந்துள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விபுல் சவுத்ரிக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் சவுத்ரியின் ஆடிட்டர் சைலேஷ் பாரீக் என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில் விபுல் சவுத்ரியை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நேற்று செய்தனர். ஏற்கனவே, துாத்சாகர் பால்பண்ணை ஊழியர்களுக்கான போனஸ் தொகைரூ.14.8 கோடியை கையாடல் செய்ததாக கடந்த 2020ம் ஆண்டு விபுல் சவுத்ரி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
கேரளாவில் வைக்கம் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்: புன்னமடை காயல் கரையோரத்தில் பிரமாண்ட ஏற்பாடு
பிரதமர் மோடியின் கல்வி ஆவணங்களை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.25,000 அபராதம் விதிப்பு
புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமான பணிகள்: திடீர் ஆய்வு செய்த பிரதமர் நரேந்திர மோடி!
டெல்லி சாஸ்திரி பூங்கா அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் அதிகாலை பயங்கர தீ விபத்து : சுமார் 500 கடைகள் தீயில் எரிந்து சேதம்!!
வடமாநிலங்களில் ராம நவமி கொண்டாட்ட பேரணியில் வன்முறை: பல இடங்களில் வாகனங்கள், வீடுகள் தீவைத்து எரிப்பு
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!