சென்னை விமான நிலையத்தில் 12 பழைய விமானங்களை அகற்றும் பணிகள் தொடக்கம்
2022-09-14@ 14:51:32

சென்னை : சென்னை விமான நிலையத்தில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள செயல்பாட்டில் இல்லாத விமான நிறுவனங்களை சேர்ந்த 12 பழைய விமானங்கள் அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளன. சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் வருகின்ற நிலையில் போதுமான இட வசதி இல்லாத காரணத்தால் புதிய விமான நிலைய கட்டுமான பணி ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விமான நிலையத்தில் பழைய விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த விமானங்களை அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், செயற்பாட்டில் இல்லாத 12 பழைய விமானங்களை கிங் பிஷர், ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் விமானங்கள் சுமார் 10 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் இருப்பது தெரியவந்தது.
இதனால், அதிகாரிகள் அதில் உள்ள உதிரி பாகங்களை தொழில் நுட்ப வல்லுநர்களைக் கொண்டு தனித்தனியா பிரித்தெடுத்து முழுமையாக அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். செயல்பாட்டில் இல்லாத 12 பழைய விமானங்களில் பறவைகள் கூடுகட்டி மற்ற விமான போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதால், விபத்து ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. மேலும் கூடுதல் விமானங்கள் நிறுத்த போதிய இடவசதி இல்லாத நிலையில் செயல்பாட்டில் இல்லாத விமானங்களை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டும் இதுபோன்று 5 விமானங்களை அகற்றினர். எனவே,செயற்பாட்டில் இல்லாத விமானத்தின் உதிரி பாகங்கள் மீண்டும் விமானத்தில் பொருத்தக்கூடிய நிலையில் இருப்பதால் தொழில் நுட்ப வல்லுநர்களை கொண்டு தனித்தனியாக பிரிக்கப்பட்டு அதில் உள்ள பாகங்களை அகற்றும் பணியில் உள்ளனர். மேலும், இத்தனை ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லாத விமான நிறுவனத்திடம் இதற்கான தொகையும் வசூலிக்க சென்னை விமான நிலைய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகள்
போலி செய்திகள் மற்றும் வெறுப்பு செய்திகளை கண்டறிய ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பயிற்சி: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு!
நெல்லையில் குற்றவாளிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங் விசாரணைக்கு ஆஜராக மாநில மனித உரிமை ஆணையம் சம்மன்.!
அரசு நிலத்திற்குரிய குத்தகை பாக்கி 31 கோடியை சத்யா ஸ்டுடியோவிடமிருந்து வசூலிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!
திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு ஜூன் 28ல் குடமுழுக்கு: சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு
தருமபுரி, நீலகிரி, கோவை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ்!
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!