புதிய அட்டர்னி ஜெனரலாக முகுல் ரோத்தகி நியமனம்
2022-09-13@ 14:16:44

புதுடெல்லி: ஒன்றிய அரசின் புதிய அட்டர்னி ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த மாதம் 1ம் தேதி பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது. ஒன்றிய அரசின் மூத்த வழக்கறிஞரும், அட்டர்னி ஜெனரலுமான கே.கே.வேணுகோபாலின் (91) பதவிக்காலம் கடந்த ஜூன் 29ம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால், மீண்டும் அவரது பதவியை ஒன்றிய அரசு நீடித்தது. இவ்வாறாக கே.கே.வேணுகோபாலின் பதவிக் காலம் மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் தனது பதவியை நீடிக்க வேண்டாம் என்று கே.கே.வேணுகோபால் ஒன்றிய அரசிடம் வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் ஒன்றிய அரசின் மூத்த வழக்கறிஞரான முகுல் ரோத்தகி, அடுத்த புதிய அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த மாதம் 1ம் தேதி ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரல் பதவியை ஏற்பார். இவர் ஏற்கனவே கடந்த 2014 முதல் 2017ம் வரை ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரலாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
எங்கு சென்றாலும் சரக்கு கிடைக்கவில்லை; பீகார் முதல்வர் வீட்டை குண்டு வைத்து தகர்ப்போம்!.. குஜராத்தில் இருந்து போதை ஆசாமி மிரட்டல்
திருப்பதி மலைப்பாதையில் நடமாடிய சிறுத்தை: பக்தர்கள் அதிர்ச்சி
ராகுல் விஷயத்தில் ஒருங்கிணையும் எதிர்கட்சிகள்; காங்கிரஸ் - ஆம்ஆத்மி கூட்டணியா?.. கெஜ்ரிவால் கருத்தால் டெல்லியில் பரபரப்பு
கொச்சியில் கடற்படைக்கு சொந்தமான துருவ் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது
இன்று அதிகாலை ராஜஸ்தான், அருணாச்சலில் நிலநடுக்கம்
டெல்லி ராஜ்காட்டில் சத்தியாகிரக போராட்டம் எங்கள் குடும்பத்தை தொடர்ந்து அவமானப்படுத்துகிறீர்கள்!.. 32 ஆண்டுக்கு முன் நடந்ததை கூறி பிரியங்கா காந்தி உருக்கம்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி