கரூர் பேருந்து நிலையம் அருகே சிக்னல் பழுதால் வாகனஓட்டிகள் அவதி-சீரமைக்க வலியுறுத்தல்
2022-09-13@ 12:25:18

கரூர் : கரூர் பேரூந்து நிலையம் அருகே உள்ள சிக்னலில் அவ்வப்போது ஏற்படும் பழுது காரணமாக அனைத்து வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். சிக்னலை சரி பார்க்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் பேரூந்து நிலையம் அருகே மனோகரா கார்னர் பகுதியில் ரவுண்டானா அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த ரவுண்டானாவின் வழியாக கரூரில் இருந்து திருச்சி, திண்டுக்கல், கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல் போன்ற அனைத்து பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும் சென்று வருகிறது.
இதே போல், இந்த பகுதிகளில் இருந்து கரூர் பேருந்து நிலையம் வரும் வாகனங்களும் ரவுண்டானா வழியாக செல்கிறது. மேலும், இந்த ரவுண்டானா வழியாக தினமும் ஆயிரக்கணக்கான இரண்டு சக்கர வாகனங்களும் சென்று வருகிறது.முக்கிய சந்திப்பு பகுதியாக மனோகரா கார்னர் ரவுண்டானா பகுதி உள்ளது. இந்நிலையில், அவ்வப்போது ஏற்படும் சிக்னல் பழுது காரணமாக வாகன ஓட்டிகள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் முன்னேறிச் செல்வதில் ஆர்வம் காட்டி செல்வதால் சில சமயங்களில் இந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.
எனவே, முக்கிய சந்திப்பு பகுதியில் உள்ள ரவுண்டானா பகுதியில் சிக்னல் பழுதின்றி செயல்பட தேவையான ஏற்பாடுகளை துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
நெல்லை - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இன்று இயக்கம்
ஏப்ரல் 1 முதல் அமல் கீழடி அருங்காட்சியகத்தில் பார்வையாளர் கட்டணம் நிர்ணயம்
ஊட்டி ஏரியில் வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள்
ஊட்டியில் கொட்டும் மழையிலும் தாவரவியல் பூங்கா ஊழியர்கள் 3வது நாளாக போராட்டம்
தமிழர்களின் பாரம்பரிய பெருமையை சொல்ல வேண்டும் என்றால் அதற்கு 2 நூற்றாண்டுகள் தேவைப்படும்; அமைச்சர் அன்பில் மகேஷ்
திருத்துறைப்பூண்டி மனநல காப்பகத்தை சுகாதார துறை அதிகாரி ஆய்வு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி