பொதுமக்களிடம் தகராறு தட்டிக்கேட்ட ஓட்டுநரை வெட்டிக் கொல்ல முயற்சி: 7 பேருக்கு வலை
2022-09-13@ 03:49:37

திருவொற்றியூர்: எண்ணூர் நேதாஜி நகரை சேர்ந்தவர் தங்கராஜ்(36). லாரி ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் அருகே சென்றபோது பின்னால் வந்த 7 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. இதில் தலை, உடல் முழுவதும் பலத்த வெட்டு காயமடைந்த தங்கராஜ் ரத்த வெள்ளத்தில் துடி துடித்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தொடர்ந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில் நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல் குடித்துவிட்டு பொதுமக்களிடம் தகராறு செய்து வந்தது. இதை தங்கராராஜுவின் நண்பர்கள் தட்டி கேட்டுள்ளனர். இவர்களுக்கு தங்கராஜு ஆதரவளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் தங்கராஜியை வீட்டு வாசலில் வெட்டி கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இது சம்பந்தமாக தங்கராஜ் அளித்த புகாரின்பேரில் நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், முனி, அஜித், தேசப்பன் மற்றும் இவர்களது கூட்டாளிகள் உள்பட 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
நகராட்சி நிர்வாகத் துறையின் மானிய கோரிக்கையில் 19 நகராட்சிகளின் தரம் உயர்த்தப்பட்டது: சுகாதார அலுவலர் சங்கம் முதல்வருக்கு நன்றி அறிவிப்பு
விளாப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா
அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் கலைஞர் அரங்க கட்டிடம் திறப்பு
வருவாய் மீட்பு சட்டத்தில் அசல் ஆவணங்களை விடுவித்து கிரையதாரர்களிடம் ரூ.6 லட்சம் வசூல்
சோழவரம் ஏரியில் வாலிபர் சடலம் மீட்பு
ஊத்துக்கோட்டையில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!