SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போளூர் அடுத்த கீழ்பட்டு கிராமத்தில் சிதிலமடைந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும்-புதிதாக கட்டுவதற்கு மக்கள் கோரிக்கை

2022-09-12@ 12:15:46

போளூர் : போளூர் அடுத்த கீழ்பட்டு கிராமத்தில் சிதிலமடைந்துள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிதாக கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.போளூர் அருகே  கீழ்ப்பட்டு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தின் நடுவில் கோயில் அருகிலும், மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்திலும் 60 லிட்டர் கொள்ளளவு கொண்ட 45 ஆண்டுகள் பழமையான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இருந்து வருகிறது.

இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியானது தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இருப்பினும், ஊராட்சி நிர்வாகம் இந்த தொட்டியில் தண்ணீர் நிரப்பி வருகிறது. இதனால் இடிந்து விழும் அபாயம் உள்ளது. மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மேலிருந்து கான்கிரீட் சிமென்ட் பில்லர்களில் உள்ள இரும்பு கம்பிகள் பழுதடைந்து, முறிந்து விழுந்து வருகின்றன. இதனால் கிராம மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

எனவே, அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் சிதிலமடைந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியை இடித்து அகற்றிவிட்டு, அதே இடத்தில் அதிக கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

  • eqqperr1

    ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி

  • freddie-cyclone

    மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!

  • patrick-day-1

    அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்