ஆளுநர் மாளிகை பெயரையும் மாற்ற வேண்டியது தானே...? சசிதரூர் கிண்டல் கேள்வி
2022-09-11@ 05:33:52

புதுடெல்லி: ‘ராஜ்பாத் பெயரை மாற்றியதை போல், ஆளுநர் மாளிகைகளின் பெயர்களையும், மாநிலங்கள் பெயரையும் மாற்ற வேண்டியதுதானே,’ என்று ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் அமைந்திருந்த ‘ராஜ்பாத்’ என்ற ராஜபாதை, பிரமாண்ட முறையில் அழகுப்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும், ராஜபாதையின் பெயரை ‘கர்த்தவ்யா பாத்’ (கடமை பாதை) என்றும் ஒன்றிய அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. கடமை பாதை திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ‘ராஜ்பாத் என்பது ஆங்கிலேய ஆட்சியின்போது இருந்த அடிமைதனத்தை வெளிப்படுத்துகிறது. எனவேதான், இந்த பெயர் மாற்றப்பட்டுள்ளது,’ என தெரிவித்தார். இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ராஜ்பாத் பெயர் கடமை பாதை என மாற்றப்பட்டுள்ளது. இதேபோல், நாட்டில் உள்ள அனைத்து ஆளுநர் மாளிகைகளும் ராஜ்பவன் என்பதை ‘கர்த்தவ்யா பவன்’கள் என மாற்றப்படுமா?. இதேபோல், ராஜஸ்தான் மாநில பெயரையும் ‘கர்த்வ்யாஸ்தான்’ என ஒன்றிய அரசு மாற்ற வேண்டும்,’ என்று கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் செய்திகள்
கேரளாவில் வைக்கம் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்: புன்னமடை காயல் கரையோரத்தில் பிரமாண்ட ஏற்பாடு
பிரதமர் மோடியின் கல்வி ஆவணங்களை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.25,000 அபராதம் விதிப்பு
புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமான பணிகள்: திடீர் ஆய்வு செய்த பிரதமர் நரேந்திர மோடி!
டெல்லி சாஸ்திரி பூங்கா அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் அதிகாலை பயங்கர தீ விபத்து : சுமார் 500 கடைகள் தீயில் எரிந்து சேதம்!!
வடமாநிலங்களில் ராம நவமி கொண்டாட்ட பேரணியில் வன்முறை: பல இடங்களில் வாகனங்கள், வீடுகள் தீவைத்து எரிப்பு
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!