புதுப்பட்டினம் பஸ் நிலையத்தில் போதிய இடவசதி இல்லாததால் சாலையில் நிறுத்தப்படும் பஸ்கள்: புதிய பஸ் நிலையம் அமைக்க மக்கள் வலியுறுத்தல்
2022-09-10@ 17:31:02

திருக்கழுக்குன்றம்: புதுப்பட்டினத்தில் உள்ள பஸ் நிலையத்தில் போதிய இட வசதி இல்லாததால், சாலையிலேயே பஸ்கள் நிறுத்தப்படுகிறது. புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். கல்பாக்கம் அருகே புதுப்பட்டினம் பகுதியில் இருந்து வாயலூர், ஆயப்பாக்கம், நல்லாத்தூர், நெரும்பூர் வழியாகவும், விட்டிலாபுரம், லட்டூர் வழியாக திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டுக்கு ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் புதுப்பட்டினம் பகுதியில் நின்று செல்வதற்காக பஜார் பகுதியில் சிறிய பஸ் நிலையம் உள்ளது.
இங்கு பஸ்களை நிறுத்த போதிய வசதி இல்லை. ஒரு பஸ் மட்டுமே நிறுத்த முடியும். இதனால் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பஸ்கள் சாலையிலேயே நிறுத்தப்பட்டு பயணிகள் ஏற்றப்படுகின்றனர். இதனால் பஜார் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இப்பகுதியில் உள்ள அரசு நிலத்தில் விரிவான நவீன பஸ் நிலையம் அமைப்பதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் எம்எல்ஏ உள்பட பல்வேறு துறை உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும் செய்திகள்
டான்செட், சிஇஇடிஏ தேர்வு முடிவுகள் ஏப்.15-க்குள் வெளியீடு: அண்ணா பல்கலைக்கழகம் தகவல்
இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்ட கச்சத்தீவில் மிகப்பெரிய புத்தர் சிலையை சிங்களக் கடற்படை அமைத்திருப்பதற்கு ராமதாஸ் கண்டனம்!!
அடுத்த 3 மணி நேரத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி உட்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பேட்டரி வாகனங்கள் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு
ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம் சட்டமன்றத்தில் எதிரொலித்தது: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு
தமிழ்நாட்டின் மின்தேவையை நிறைவு செய்வது என்எல்சி மின் உற்பத்தியை கருத்தில் கொண்டு பொறுப்புணர்வோடு அணுக வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி