தொடர் மழை காரணமாக ராமநதி அணை மீண்டும் நிரம்பியது
2022-09-10@ 15:08:04

*உபரி நீர் வெளியேற்றம்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை
கடையம் : தொடர் மழை காரணமாக ராமநதி அணை மீண்டும் நிரம்பியது. அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் ஆற்றுப்பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டும் என்று நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் 84 அடி ெகாள்ளளவு கொண்ட ராமநதி அணை உள்ளது.
இந்த அணையின் மூலம் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பாசன வசதியை பெறுகிறது. இதை தவிர்த்து 33க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் பாசனத்திற்காக கடந்த ஜூலை 25ம் தேதி கார் பருவ நெல் சாகுபடிக்கு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக ஆகஸ்ட் 3ம் தேதி அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டம் சரிய தொடங்கியது. இதனால் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி அணையின் நீர்மட்டம் 78 அடியாக இருந்தது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்தது. இதனால், நேற்று ராமநதி அணை மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி நீர்மட்டம் 82 அடியில் நிலைநிறுத்தபட்டுள்ளது. தொடர்ந்து அணைக்கு வினாடிக்கு 110 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
மேலும் செய்திகள்
காமெடி நடிகர் கோவை குணா மறைவு
பல்லாவரம் நகராட்சி வழக்கு தொடர்பாக ஈரோடு மாநகராட்சி கமிஷனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
போக்குவரத்து விதிமீறல்களுக்கான நேரடி அபராதம் செலுத்தும் திட்டம்: காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் துவக்கி வைத்தார்
விசைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு விசைத்தறி முதலாளிகளுடன் கோட்டாட்சியர் பேச்சுவார்தை
பூந்தமல்லியில் உலக வன நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: ஏராளமானோர் பங்கேற்பு
தடை செய்யப்பட்டவைகளுக்கு பதிலாக மாற்று பூச்சிக்கொல்லி மருந்துகள்: மாவட்ட கலெக்டர் தகவல்
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!