உக்ரைனில் குறிக்கோளை அடையும் வரை தாக்குதல் தொடரும்: அதிபர் புடின் உறுதி
2022-09-08@ 00:59:38

மாஸ்கோ: உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது ஆறு மாதங்களாக நடந்து வருகிறது. இந்நிலையில், பொருளாதார தடைகளினால் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை முடக்க நினைத்தால், உக்ரைன் மீதான அதன் ராணுவ நடவடிக்கைகளின் பிடி இறுகும் என்று அதிபர் புடின் எச்சரித்துள்ளார்.இது குறித்து விளாடிவோஸ்டாக் நகரில் நடந்த பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் பேசிய புடின், ‘ரஷ்யா ராணுவ நடவடிக்கைகளை தொடங்கவில்லை. போரை முடிவுக்கு கொண்டு வரவே ரஷ்யா விரும்புகிறது. உக்ரைனில் ரஷ்யா ஆதரவு பெற்ற பிரிவினைவாத அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை பாதுகாக்கவே உக்ரைனுக்கு ரஷ்ய படையினர் அனுப்பப்பட்டனர். டான்பாஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்காகவே ரஷ்யா போரிடுகிறது. தனது பொருளாதார தடைகளுக்கு ரஷ்யா பணியாது. எங்களின் குறிக்கோளை எட்டும் வரையில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவோம்,’ என்று எச்சரித்தார்.
மேலும் செய்திகள்
ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் ஜூக்கர்பெர்க் - பிரிசில்லா தம்பதிக்கு 3வது பெண் குழந்தை
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு
அமெரிக்காவின் இந்தியாவுக்கான தூதராக கார்செட்டி பதவியேற்பு: கமலா ஹாரிஸ் பங்கேற்பு
லண்டன் நாடாளுமன்ற சதுக்கம் அருகே காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீண்டும் போராட்டம்
புளோரிடா பல்கலை. அறங்காவலர் குழுவில் இந்தியர்
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் பதவியேற்பு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி