பாலியல் வழக்குகளில் கைதாகும் டீன்ஏஜ் வயதினருக்கு கவுன்சலிங்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
2022-09-08@ 00:40:51

மதுரை: பாலியல் வழக்கில் கைதாகும் டீன் ஏஜ் வயதினருக்கு கவுன்சலிங் வழங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் கருப்பாயூரணியைச் சேர்ந்த கந்தன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் மகன் லட்சுமணன், ராஜபாளையம் போலீசாரால் போக்சோ வழக்கில் கைதானார். தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் உள்ளார். இதை ரத்து செய்து, விடுவிக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, என்.ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவு: குண்டர் சட்டம் தொடர்பான உத்தரவு நகல் 3 நாள் தாமதமாக வழங்கப்பட்டுள்ளது. மனுதாரரின் கோரிக்கை மனு அரசால் 21 நாள் தாமதமாக பரிசீலிக்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர் மகனை குண்டர் சட்டத்தில் கைது செய்த விருதுநகர் கலெக்டரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தகவல் தொழில்நுட்பம் தற்போது பெரும் சவாலாய் மாறியுள்ளது. டீன் ஏஜ் வயதினரின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மனுதாரர் மகனுக்கு 18 வயதும், மற்றவர்கள் சிறுவர்களுமாய் உள்ளனர்.
புத்தகத்தை கையில் சுமக்க வேண்டிய இவர்கள் தற்போது பாலியல் குற்றவாளிகளாகியுள்ளனர். செல்போன் வழியே சுலபமாக பாலியல் ஆபாசத்தை பார்த்து வெளிப்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது. இவர்களைப் போன்றவர்களை சிறையில் அடைக்கும் போது அவர்களது மனரீதியான வக்கிரத்தை போக்கிடத் தேவையான முயற்சிகளை எடுக்க வேண்டும். இதற்கான தொழில்நுட்ப வழிகாட்டுதலை தமிழக அரசு உருவாக்க வேண்டும். பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு சிறையில் இருந்து வெளிவரும் ஒவ்வொருவருக்கும் தேவையான கவுன்சலிங் வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்தனர்.
Tags:
Sex case Rape teenager Counseling Government of Tamil Nadu ICourt Branch பாலியல் வழக்கு கைதாகும் டீன்ஏஜ் கவுன்சலிங் தமிழக அரசு ஐகோர்ட் கிளைமேலும் செய்திகள்
இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் தொல்லை குமரி பாதிரியார் பாளை மத்திய சிறைக்கு மாற்றம்: ஆபாச படங்களை பரப்பியவர்களை பிடிக்க கேரளாவில் தனிப்படை முகாம்
படிக்காததை கண்டித்ததால் 3வது மாடியில் இருந்து குதித்த மாணவி
புதுச்சேரியில் நீர்தேக்க தொட்டி மீது ஏறி அரசு ஊழியர்கள் பெட்ரோல் கேனுடன் தற்கொலை மிரட்டல்: பணி நீக்கத்தை கண்டித்து போராட்டம்; போலீசாருடன் வாக்குவாதம்
கீழடி அருங்காட்சியகம் மெக்சிகோ தூதர் வியப்பு: பழம்பொருட்கள் குறித்து கேட்டறிந்தார்
எண்ணெய் கசிவு பாதிப்பை ஆய்வு செய்யக் கோரி வழக்கு: ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு
மக்கள் செல்ல விடாமல் கட்டுப்பாடுகள் கொடநாடு பாதை பிரச்னை எஸ்டேட் வக்கீல் விடுதலை: 16 ஆண்டு வழக்கில் குன்னூர் நீதிமன்றம் தீர்ப்பு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி