ஊட்டி டேவிஸ் பூங்கா சீரமைப்பு பணி தீவிரம்-பொதுமக்கள், சுற்றுலா ஆர்வலர்கள் மகிழ்ச்சி
2022-09-06@ 13:00:24

ஊட்டி : ஊட்டி நகராட்சிக்குட்பட்ட டேவிஸ் பூங்கா சீரமைக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில், சுற்றுலா ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் பல்வேறு சிறிய பூங்காக்கள் அமைக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இப்பூங்காக்கள் துவக்கப்பட்டது. தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த பூங்காக்களை நகராட்சி நிர்வாகம் பராமரித்து வந்தது. ஆனால், இடையில் பல ஆண்டுகள் இப்பூங்காக்களை பராமரிக்கப்படாத நிலையில், அனைத்து பூங்காக்களும் புதர்மண்டி சமூக வீரோதிகளின் கூடாரமாக மாறியது. இதனை தொடர்ந்து இப்பூங்காக்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பூங்காக்கள் அனைத்தும் பொலிவுப்படுத்தப்பட்டன.
ஆனால், கடந்த அதிமுக., ஆட்சியின் போது, 10 ஆண்டுகளும் இந்த பூங்காக்களை பராமரிக்காமல் விடப்பட்டது. இதனால், அனைத்து பூங்காக்களும் பொலிவிழந்து காணப்படுகிறது. குறிப்பாக, கலெக்டர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ள டேவிஸ் பூங்கா முற்றிலும் பராமரிப்பின்றி காடாக மாறியது. இதனால், இது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது. மேலும், கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறியது. எனவே, இப்பூங்காவை சீரமைக்க வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதனை தொடர்ந்து, இப்பூங்காவை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் முன் வந்தது. இப்பூங்காவை சீரமைக்க தற்போது ரூ.9 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பூங்காவில் உள்ள புதர்கள் அகற்றப்பட்டு சீரமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், பூங்காவை சுற்றிலும் கான்கிரீட் சுவர்கள் அமைக்கும் பணிகளும் துவக்கப்பட்டுள்ளது. ஒரு மாத்திற்குள் இப்பணிகள் முடிக்கப்பட்டு இப்பூங்காவை காண உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் ஹார்டுவேர்ஸ் கடைக்காரர் வீட்டில் கொள்ளையடித்த 150 சவரன் நகையை விவசாய கிணற்றில் பதுக்கிய ஆசாமி: ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றம்
அதிமுக ஆட்சியில் முறைகேடாக ஆவின் பணி நியமனம் ரத்து எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
ஊட்டி மலர் கண்காட்சி மே 19ம் தேதி துவக்கம்
நாகத்தின் வாந்தியில் இருந்து வந்த மாணிக்க கல் என கூறி சாமியார் வேடத்தில் ஏமாற்றிய போலி ஐஏஎஸ் மீது வழக்கு
எஸ்.ஐ தேர்வுக்காக தீவிர ஓட்டப்பயிற்சி வாலிபர் திடீர் சாவு
மோடி ஆட்சியில் 23 பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டுள்ளது: முத்தரசன் குற்றச்சாட்டு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!