ஆவடியில் இருசக்கர வாகனங்கள் தண்டவாளத்தை கடக்காமல் இருக்க தற்காலிக தடுப்பு
2022-09-06@ 01:08:09

ஆவடி: ஆவடியில் இருசக்கர வாகனங்கள் தண்டவாளத்தை கடக்காமல் இருக்க தற்காலிக தடுப்பு போடப்பட்டுள்ளது. ஆவடி ரயில் நிலையத்தில் இருபுறமும் எல்.சி., கேட் 8 உள்ளது. இந்த ரயில்வே கேட் பெரும்பாலும் மூடியே இருக்கும். இந்த ரயில்வே கேட்டை நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், பல்வேறு காரணங்களுக்காக கடந்து செல்கின்றனர். இதில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் அடிக்கடி ரயில் விபத்துகள் நடந்து வந்தன. ஆவடி ரிசர்வ் போலீசார் இருசக்கர வாகனத்தில் தண்டவாளத்தை கடந்து செல்வோர் மீது அபராதங்கள் விதித்து வந்தனர்.
ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாத வாகன ஓட்டிகள் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் தண்டவாளத்தை கடந்து வந்தனர். இந்நிலையில், பொதுமக்களின் தொடர் புகாரையடுத்து, எல்.சி., கேட் 8ன் இருபுறமும் இருசக்கர வாகனங்கள் செல்லாதவாறு தண்டவாளத்தின் குறுக்கு கல்லை கொண்டு தற்காலிக தடுப்புகள் அமைக்கும் பணியில் நேற்று ஊழியர்கள் ஈடுபட்டனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, `ரயில் நிலையத்தில் ஏற்படும் தொடர் விபத்தால், தற்காலிக தடுப்பு அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதையடுத்து, எல்.சி.,கேட் 8ன் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கும்’ என்று தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை நாடாளுமன்றம் தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை: வைகோ கண்டனம்!
உடன்குடி பணியாளர் தற்கொலை சம்பவத்தில் வழக்கு பதிவு, விஷவாயு தாக்கி உயிரிழப்பது தடுக்கப்படும்: சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு!
பரத நாட்டிய மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதா? தனியார் அறக்கட்டளை இயக்குநர் டிஜிபியிடம் விளக்கம்: தேசிய மகளிர் ஆணையம் புகாரால் பரபரப்பு
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் முயற்சியாக அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு அழைப்பு!
பெரம்பூர் நகைக்கடை கொள்ளையில் மேலும் ஒருவர் கைது; 700 கிராம் தங்கம் பறிமுதல்
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!