பலாத்கார விவகாரம் காரணமா? கர்நாடக மடாதிபதி தூக்கிட்டு தற்கொலை
2022-09-06@ 00:54:56

பெலாகவி: கர்நாடக மாநிலம், பெலாகவி மாவட்டத்தில் நிஜின்ஹால் கிராமத்தில் குரு மடிவாலேஷ்வரர் ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தின் மடாதிபதி பசவ்சித்லிங்கா என்ற சாமியார் நேற்று காலை வெகுநேரம் ஆகியும் தனது அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். போலீசார் நடத்திய விசாரணையில், மடாதிபதி எழுதி வைத்துள்ள கடிதம் கிடைத்தது. அதில், ‘நான் எந்த தவறும் செய்யவில்லை. எனது மரணத்துக்கு நான் தான் காரணம். எனது மரணம் தொடர்பாக யாரிடமும் விசாரிக்க கூடாது’ என்று எழுதப்பட்டுள்ளது.
எனவே சாமியார் பசவ்சித்லிங்கா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சமீபத்தில் கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள முருக மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி, விடுதி மாணவிகளை பலாத்காரம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியான ஆடியோவில் பல மடாதிபதிகள் இதுபோல பலாத்காரத்தில் ஈடுபட்டு உள்ளதாக பேசும் பெண்கள், நிஜின்ஹால் மடத்தின் பெயரையும் குறிப்பிடுகின்றனர். கடந்த சில நாட்களாக மனவருத்தத்தில் இருந்தாக கூறப்படும் மடாதிபதி பசவ்சித்லிங்கா தற்கொலை செய்து கொண்டிருப்பது பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகள்
தீவிரவாத வழக்குகள் உள்பட இம்ரான் கானுக்கு 3 வழக்குகளில் ஜாமீன்: லாகூர் உயர்நீதிமன்றம் வழங்கியது
பஞ்சாப்பில் போலீசால் தேடப்படும் அம்ரித்பால்சிங் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: பல்வேறு படங்களை வெளியிட்டு தேடுதல் வேட்டை
ஒன்றிய அரசுடன் இணைந்து பணியாற்ற விருப்பம்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சமாதானம்
3வது முறையாக விசாரணைக்கு ஆஜர்கவிதாவின் செல்போன்கள் அமலாக்கத்துறையிடம் ஒப்படைப்பு
மக்களவையில் விவாதமின்றி துணைமானிய கோரிக்கை நிறைவேற்றம்
புதிதாக 699 பேருக்கு கொரோனா: மேலும் 2 பேர் உயிரிழப்பு
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!