SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆப்கானிஸ்தானில் ரஷ்ய தூதரகம் அருகே பயங்கர குண்டுவெடிப்பு: 2 அதிகாரிகள் பலி

2022-09-06@ 00:54:03

காபூல்: ஆப்கான் தலைநகர் காபூலில் ரஷ்ய தூதரகம் அமைந்துள்ளது. நேற்று காலை வழக்கம் போல் தூதரகம் பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது. விசா பெறுவதற்காக பொதுமக்கள் பலர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். விண்ணப்பதாரர்களின் பெயர்களை அறிவிப்பதற்காக தூதரக அதிகாரிகள் வெளியே வந்துள்ளனர். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது. இதில் தூதரக அதிகாரிகள் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபகமாக உயிரிழந்தனர். மேலும் 15 பேர் உயிரிழந்து இருக்கலாம் அல்லது காயமடைந்து இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. ஆனால் இது குறித்த விவரங்களை ரஷ்ய தூதரகம் வௌியிடவில்லை. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்