ஆப்கானிஸ்தானில் ரஷ்ய தூதரகம் அருகே பயங்கர குண்டுவெடிப்பு: 2 அதிகாரிகள் பலி
2022-09-06@ 00:54:03

காபூல்: ஆப்கான் தலைநகர் காபூலில் ரஷ்ய தூதரகம் அமைந்துள்ளது. நேற்று காலை வழக்கம் போல் தூதரகம் பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது. விசா பெறுவதற்காக பொதுமக்கள் பலர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். விண்ணப்பதாரர்களின் பெயர்களை அறிவிப்பதற்காக தூதரக அதிகாரிகள் வெளியே வந்துள்ளனர். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது. இதில் தூதரக அதிகாரிகள் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபகமாக உயிரிழந்தனர். மேலும் 15 பேர் உயிரிழந்து இருக்கலாம் அல்லது காயமடைந்து இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. ஆனால் இது குறித்த விவரங்களை ரஷ்ய தூதரகம் வௌியிடவில்லை. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
மேலும் செய்திகள்
காலநிலை மாற்றம், நுகர்வு கலாச்சாரத்தால் உலகளவில் தண்ணீருக்கு நெருக்கடி ஏற்படும் அபாயம்: ஐ.நா. எச்சரிக்கை
மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் 6வது முறையாக பின்லாந்து முதலிடம்.! 125 இடத்தில் இந்தியா
தஜிகிஸ்தான் நாட்டில் 5.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்
அமெரிக்கா - தென்கொரியா ராணுவம் தீவிர போர் பயிற்சி: ஒரே நாளில் பல ஏவுகணைகளை சோதித்து வடகொரியா பதிலடி
பலத்த காற்று, வெள்ளத்தால் மிதக்கும் கலிஃபோர்னியா: சுமார் ஒரு லட்சம் வீடுகளில் மின்சாரமின்றி தவிக்கும் மக்கள்
ஓரின சேர்க்கையாளர்களுக்கு 10 ஆண்டு சிறைதண்டனை: உகாண்டா அரசு அதிரடி
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!