உலக பாலியல் தினத்தை முன்னிட்டு மனித சங்கிலி, கையெழுத்து இயக்கம்; முன்னாள் நீதிபதி, மருத்துவர்கள், திரைப்பட பிரபலங்கள் பங்கேற்பு
2022-09-05@ 02:19:55

அண்ணாநகர்: உலக பாலியல் தினத்தையொட்டி, வடபழனியில் உள்ள டாக்டர் காமராஜ் மருத்துவமனையில் பாலியல் விழிப்புணர்வு மனிதசங்கிலி, கையெழுத்து இயக்கம், பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு ஆகியவை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாலியல் உரிமை குழு உறுப்பினர் டாக்டர் டி.காமராஜ், கமிட்டி தலைவரும், அசோசியேட் செயலாளருமான டாக்டர் கே.எஸ்.ஜெயராணி காமராஜ் தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினராக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியும், மாநில சட்ட கமிஷன் உறுப்பினருமான எஸ்.விமலா, திரைப்பட இயக்குனர்கள் வெற்றிமாறன், பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், டாக்டர் டி.காமராஜ், டாக்டர் கே.எஸ்.ஜெயராணிகாமராஜ் ஆகியோர் கூறியதாவது: குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்துவருவது வேதனை அளிக்கிறது. பாலியல் தொடர்பான விழிப்புணர்வு அனைவருக்குமே மிக அவசியம். குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு, பெற்றோர்களுக்கு தேவைப்படுகிறது.
இதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை நாங்கள் கடந்த 28 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறோம். பாலியல் விஷயங்களையும், பாலியல் உணர்வுகளையும் மூடி வைப்பதால் பாலியல் வன்முறையாக உருவெடுக்கிறது. இந்த சமூக கொடுமையிலிருந்து மீள முறையான பாலியல் கல்வி தேவைப்படுகிறது. அதற்காகத்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கேரள உயர்நீதிமன்றம், பள்ளி பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனை நாங்கள் மனப்பூர்வமாக வரவேற்கிறோம். இதே போல் தமிழகத்தில் பள்ளி பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை சேர்க்க வேண்டும். கொரோனா தாக்குதலால் உலக நாடுகள் அனைத்திலும் பாலியல் தொடர்பான பிரச்னைகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆகவே, நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகும். இவ்வாறு அவர்கள் கூறினர். நிகழ்ச்சியில் மருத்துவர்கள், பெண்கள், மாணவர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
மருத்துவருக்கு ஓய்வூதிய பணப்பலன் வழங்க ரூ. 30,000 லஞ்சம் வாங்கிய மருத்துவமனை ஊழியர் கைது
ஆவடி அருகே பரபரப்பு ரத்த வாந்தி எடுத்து ஜிம் மாஸ்டர் திடீர் மரணம்: இரண்டு கிட்னி செயலிழப்புக்கு ஸ்டீராய்டு மருந்து காரணமா?
பத்திரப்பதிவுக்கு லஞ்சம் பெற்ற பல்லாவரம் சார்பதிவாளர் இடைத்தரகர் கைது: லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி
ரூ. 44 கோடி மதிப்பீட்டில் சென்னை குடிநீர் ஆதாரமாக மாதவரம் ரெட்டேரி மாற்றப்படும்: அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
160 ஏக்கர் அரசு நிலத்துக்கான வாடகை பாக்கி ரூ. 731 கோடியை ஒரு மாதத்தில் செலுத்த வேண்டும்: கிண்டி ரேஸ் கிளப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
வேளச்சேரிக்கு பிரத்யேகமாக ஒரு மின்நிலையம் அமைக்க வேண்டும்: பேரவையில் அசன் மவுலானா வலியுறுத்தல்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!