10ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடக்க இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு ஒத்திவைப்பு: வாரியம் அறிவிப்பு
2022-09-04@ 00:29:30

சென்னை: வரும் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடக்க இருந்த ஆசிரியர் தகுதித்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேர தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதன்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு மொத்தம் 2 தாள்களை கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெற்றால் இடைநிலை ஆசிரியராகவும், 2ம் தாளில் தேர்ச்சி பெற்றால் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.
இந்த டெட் தேர்வில் தேர்ச்சி பெறும் சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லும் எனும் நிலை இருந்தது. தற்போது அந்நிலை மாற்றப்பட்டு ஆயுள் முழுவதும் சான்றிதழ் செல்லும் என்ற நிலை உள்ளது.இந்நிலையில் இந்தாண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு ஆகஸ்ட் 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடப்பதாக இருந்தது. ஆனால், அந்த தேர்வு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. தொடர்ந்து, வரும் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. தற்போது, இந்த தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1க்கான தேர்வு வரும் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது நிர்வாக காரணங்களினால் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 ஒத்திவைக்கப்படுகிறது என தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
டான்செட், சிஇஇடிஏ தேர்வு முடிவுகள் ஏப்.15-க்குள் வெளியீடு: அண்ணா பல்கலைக்கழகம் தகவல்
இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்ட கச்சத்தீவில் மிகப்பெரிய புத்தர் சிலையை சிங்களக் கடற்படை அமைத்திருப்பதற்கு ராமதாஸ் கண்டனம்!!
அடுத்த 3 மணி நேரத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி உட்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பேட்டரி வாகனங்கள் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு
ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம் சட்டமன்றத்தில் எதிரொலித்தது: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு
தமிழ்நாட்டின் மின்தேவையை நிறைவு செய்வது என்எல்சி மின் உற்பத்தியை கருத்தில் கொண்டு பொறுப்புணர்வோடு அணுக வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி