தகுதியுள்ள மாற்றுத்திறனாளிக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடு ஒதுக்கீடு
2022-09-03@ 01:43:33

சென்னை: கிராமம் மற்றும் நகரங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடு ஒதுக்கீடு செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலாளர் இரா.ஆனந்தகுமார் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: வறுமை கோட்டிற்கு கீழ் தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக வீடு ஒதுக்கீடு செய்யப்படுவதை கண்காணிப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அறிவுறுத்தப்படுகிறார். மொத்த ஒதுக்கீட்டில் 5 சதவிகித இடஒதுக்கீடு இவர்களுக்கு வழங்கப்படும். அடுக்குமாடி குடியிருப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தள குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
இன்ஃபுளூயன்சா காய்ச்சலே இல்லை என்ற நிலையை நோக்கி தமிழ்நாடு சென்று கொண்டிருக்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
2 நாட்கள் விடுமுறையை தொடர்ந்து நாளை மீண்டும் கூடுகிறது தமிழ்நாடு சட்டசபை
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
10,000 சுகாதார பணியாளர்களுக்கு இலவசமாக இன்புளூயன்சா தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
பாஜவை கண்டித்து தலைநகரங்களில் காந்தி சிலை முன்பு இன்று அறப்போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
சென்னை காவேரி மருத்துவமனையில் இளம் வயதில் ஏற்படும் மாரடைப்பு?: சர்வதேச கருத்தரங்கில் மருத்துவர்கள் தகவல்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி