தமிழகத்தில் கோவை, நீலகிரியில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு!: வானிலை மையம் எச்சரிக்கை..!!
2022-09-02@ 14:00:37

சென்னை: தமிழகத்தில் கோவை, நீலகிரியில் இன்று மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் தெரிவித்த செய்தியில், வட தமிழ்நாட்டில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கோவை, நீலகிரியில் இன்று பலத்த மழை பெய்யும். இன்று திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும், தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 4,5-ல் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூர் , நாமக்கல், திருப்பத்தூர், மதுரை, திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்தது. செப்டம்பர் 6ல் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருப்பத்தூர், தென்காசி, மதுரை, திருச்சி, வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
செப்டம்பர் 2,3ல் வடகேரளா, லட்சத்தீவு, தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல், கர்நாடக கரையோரம் பலத்த சூறாவளி வீசக்கூடும். செப்.5,6 தேதிகளில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்தமிழக கரையோரம், தென்மேற்கு வங்கக்கடலில் சூறாவளி வீச வாய்ப்புள்ளது. மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி வீசவுள்ளதால் மீனவர்களுக்கு 5 நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
மின் வேலியில் சிக்கி யானைகள் பலியாகும் விவகாரத்தில் அதிகாரிகள் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை ஆளுநர் இனியும் காலம் தாழ்த்தாமல் ஒப்புதல் அளிக்க வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்
அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை: காவல்துறை ஐகோர்ட்டில் தகவல்
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
கல்வி சுற்றுலா செல்லும் மாணவர்களின் பாதுகாப்புக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கல்வி நிறுவனங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
கோயில் அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான குழுக்கள் மே மாதத்துக்குள் நியமிக்கப்படும்: ஐகோர்ட்டில் அறநிலையத்துறை உறுதி
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!