மீட்கப்பட்ட பணிப்பெண்ணின் அவலநிலை உடல் முழுவதும் காயங்கள் பற்களை உடைத்து சித்ரவதை: கொடுமைப்படுத்திய பாஜ மகளிரணி தலைவி கைது
2022-09-01@ 02:47:51

ராஞ்சி: பாஜ மகளிரணி நிர்வாகி சீமா பத்ராவின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட பழங்குடியின பணிப்பெண்ணுக்கு உடல் முழுவதும் காயங்கள் இருப்பதாகவும், அவரின் பல பற்கள் உடைக்கப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பாஜ மகளிரணி நிர்வாகி சீமா பத்ரா. இவரது கணவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி. பத்ரா வீட்டில், 29 வயதான பழங்குடியின பெண் சுனிதா என்பவர் கடந்த 10 ஆண்டாக வேலை செய்து வந்தார். அவரை பத்ரா கடந்த 8 ஆண்டாக அறையில் பூட்டி வைத்து மனிதாபிமானம் இல்லாமல் சித்ரவதை செய்துள்ளார்.
சிறுநீரை குடிக்க வைத்தும், இரும்பு ராடால் அடித்தும் கொடுமைபடுத்தி உள்ளார். பத்ரா மகனின் நண்பர் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் ராஞ்சி அர்கோரா போலீசார், பத்ரா வீட்டிலிருந்து சுனிதாவை மீட்டுள்ளனர். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.சுனிதாவின் உடல் நிலை குறித்து போலீசார் கூறுகையில், ‘அவரது உடல் முழுவதும் காயங்கள் உள்ளன. பல பற்கள் அடித்து உடைக்கப்பட்டுள்ளன. உடலில் பல இடங்களில் தீக்காயங்களும் உள்ளது. சுனிதா மிக கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது,’ என்றனர். இதற்கிடையே, பணிப்பெண்ணை கொடுமைபடுத்திய சீமா பத்ராவை பாஜ கட்சி சஸ்பெண்ட் செய்துள்ளது. சுனிதா புகாரின் பேரில் ராஞ்சி போலீசார் நேற்று அதிகாலை சீமா பத்ராவை கைது செய்துள்ளனர்.
மேலும் செய்திகள்
வீட்டில் தனியாக இருந்த 10ம் வகுப்பு மாணவியை மிரட்டி பலாத்காரம்: தொழிலாளிக்கு வலை
பலாத்காரம் செய்து ஆசிரியை கொலை ஏரிக்கரையில் நிர்வாணமாக புதைப்பு: 20 நாளுக்கு பிறகு ஆட்டோ டிரைவர் கைது
வேளச்சேரி தனியார் விடுதியில் இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்தவர் கைது
சீர்திருத்த பள்ளியில் சிறுவன் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
போதையில் கலாட்டா செய்தவர்களுக்கு ஆதரவாக போலீஸ் நிலையத்தில் புகுந்து தகராறு செய்த பாஜ நிர்வாகி கைது
நாகப்பட்டினத்தில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள கடல் அட்டை பறிமுதல் 3 பேர் கைது
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி