மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழா கருங்குருவிக்கு உபதேசம் வழங்கிய லீலை
2022-08-30@ 12:33:29

மதுரை : மீனாட்சியம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவை முன்னிட்டு நேற்று கருங்குருவிக்கு உபதேசம் வழங்கிய நிகழ்ச்சி நடந்தது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று முதல் அடுத்த 10 நாட்களிலும் சிவபெருமானின் 10 திருவிளையாடல்கள் கோயிலில் அரங்கேற்றப்படவுள்ளன.
நேற்று காலை மீனாட்சி அம்மன் கோயில் சுவாமி சன்னதியில் இறைவன் கருங்குருவிக்கு உபதேசம் திருவிளையாடல் நடத்தப்பட்டது. இதுகுறித்து கோயில் பட்டர்கள் கூறும்போது, ‘‘முற்பிறவியில் செய்த சிறிய பாவத்தினால் ஒருவன் மறுபிறப்பில் கருங்குருவியாக பிறக்கிறான். இந்த கருங்குருவியை காகங்கள் துன்புறுத்தியதால், உயிருக்குப் பயந்து நெடுந்தூரம் பறந்து சென்று ஒரு மரக்கிளையில் அந்த குருவி வருத்தத்துடன் அமர்ந்தது.
அந்த மரத்தின் கீழே நின்று கொண்டிருந்த சிலர், ‘பொற்றாமரைக் குளத்தில் நீராடி சோமசுந்தரரை வழிபட்டால் எண்ணியது நடக்கும்’ என்று பேசிக் கொண்டிருந்தனர். இதைக் கேட்ட கருங்குருவி அங்கிருந்து நேரே மதுரைக்கு வருகிறது. பொற்றாமரைக் குளத்தில் நீராடி இறைவனை வணங்கியதால், குருவியின் பக்திக்கு இரங்கிய இறைவன், ‘மிருத்யுஞ்சய மந்திரத்தை’ உபதேசித்தார். மேலும் ‘எளியான்’ என அழைக்கப்பட்ட கருங்குருவியின் இனத்தையே ‘வலியான்’ என மாற்றி அழைக்கச் செய்தார்’’ என்றனர்.
இரண்டாம் நாளான இன்று ‘நாரைக்கு மோட்சமளித்தல்’ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தொடர்ந்து தினமும் ஒரு திருவிளையாடல் என மாணிக்கம் விற்றது, தருமிக்கு பொற்கிழி அருளியது, உலவாக்கோட்டை அருளியது. பாணனுக்கு அங்கம் வெட்டியது, வளையல் விற்றது மற்றும் சுவாமிக்கு பட்டாபிஷேகம், நரியை பரியாக்கியது, பிட்டுக்கு மண் சுமந்தது, விறகு விற்றது என அடுத்தடுத்து நிகழ்த்தப்படும். விழா ஏற்பாடுகளை கோயில் இணை கமிஷனர் அருணாச்சலம் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் ஹார்டுவேர்ஸ் கடைக்காரர் வீட்டில் கொள்ளையடித்த 150 சவரன் நகையை விவசாய கிணற்றில் பதுக்கிய ஆசாமி: ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றம்
அதிமுக ஆட்சியில் முறைகேடாக ஆவின் பணி நியமனம் ரத்து எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
ஊட்டி மலர் கண்காட்சி மே 19ம் தேதி துவக்கம்
நாகத்தின் வாந்தியில் இருந்து வந்த மாணிக்க கல் என கூறி சாமியார் வேடத்தில் ஏமாற்றிய போலி ஐஏஎஸ் மீது வழக்கு
எஸ்.ஐ தேர்வுக்காக தீவிர ஓட்டப்பயிற்சி வாலிபர் திடீர் சாவு
மோடி ஆட்சியில் 23 பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டுள்ளது: முத்தரசன் குற்றச்சாட்டு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!