எழுந்து நின்று பேசமாட்டீயா? ஊழியரை கன்னத்தில் அறைந்த மின் வாரிய கண்காணிப்பாளர்; 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு
2022-08-29@ 01:51:59

சென்னை: எழுந்து நின்று பேசமாட்டீயா என ஊழியரை கன்னத்தில் அறைந்த மின் வாரிய கண்காணிப்பாளர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சேப்பாக்கம் பெல்ஸ் சாலையில் உள்ள மின்வாரிய உதவி பொரியாளர் அலுவலகத்தில் சிறப்பு நிலை முகவராக பணியாற்றி வருபவர் பாபு (55). இவர் வழக்கம் போல் உதவி பொறியாளர் அலுவலகத்தில் நேற்று பணியில் இருந்தார். அப்போது அண்ணாசாலை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றும் நாராயணசாமி (42), அந்த அலுவலகத்திற்கு வந்தார்.
தன்னை யார் என்று அறிமுகம் செய்யாமல் ‘எனக்கு தனியாக மீட்டர் இணைப்பு கேட்டிருந்தேன் கொடுத்தாயா, இல்லையா என தகாத வார்த்தைகளில் பேசியதாக கூறப்படுகிறது. அதோடு இல்லாமல உனக்கு என்னடா டேபுள் சேர், நீ என்ன உட்கார்ந்து கொண்டு என்னிடம் பேசுகிறாய், எழுந்து நில்லுடா நாயே என்று கூறி இடது கன்னத்தில் அறைந்தததாக கூறப்படுகிறது. என்ன என்று தெரியாமல் ஒருவர் தன்னை அடித்து விட்டு செல்கிறார் என உதவி பொறியாளர் வசந்தகுமாரியிடம், பாபு புகார் அளித்துள்ளார்.
விசாரணையில், அவரை கன்னத்தில் அறைந்தது தலைமை மின் வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் மின்வாரிய கண்காணிப்பாளர் நாராயணசாமி என தெரியவந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் மின்வாரிய கண்காணிப்பாளர் நாராயணசாமி மீது ஐபிசி 294 (பி), 323 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பொருட்காட்சியில் சென்னை மெட்ரோ ரயில் அரங்கு 3 வது இடம்: மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் தகவல்
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநருக்கு இன்று அனுப்பி வைப்பு
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை பெய்வதற்கான மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை நாடாளுமன்றம் தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை: வைகோ கண்டனம்!
உடன்குடி பணியாளர் தற்கொலை சம்பவத்தில் வழக்கு பதிவு, விஷவாயு தாக்கி உயிரிழப்பது தடுக்கப்படும்: சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு!
பரத நாட்டிய மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதா? தனியார் அறக்கட்டளை இயக்குநர் டிஜிபியிடம் விளக்கம்: தேசிய மகளிர் ஆணையம் புகாரால் பரபரப்பு
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!