தஞ்சையில் காதல் திருமணம் செய்த எஸ்ஐக்கு வரதட்சணை கொடுமை கள்ளக்காதலியுடன் கணவர் கைது
2022-08-26@ 01:09:40

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் புகழ்வேந்தன். இவர், திருச்சியில் மருந்து விற்பனை பிரதிநிதியாக உள்ளார். இவரது மனைவி சசிரேகா(33). தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றுகிறார். 8 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும், கடந்த 2018ல் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 மற்றும் 2 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஜனவரி முதல் புகழ்வேந்தன், மனைவி சசிரேகாவை வரதட்சணையாக பணம் மற்றும் நகை வாங்கி வருமாறு கூறி அடித்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தஞ்சாவூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சசிரேகா கொடுத்த புகாரில், கணவர் புகழ்வேந்தன், நூர்ஜகான்(35) என்பவரை 2வது திருமணம் செய்ய முடிவெடுத்தார். நானும் அதை ஏற்று இனி என்னிடம் வரவேண்டாம் என கூறிவிட்டேன். அதன் பின்னரும் அவர் தினமும் குடித்துவிட்டு வந்து என்னை கொடுமைப்படுத்தி வருகிறார்.
அவர் மீதும், அதற்கு தூண்டுதலாக உள்ள நூர்ஜகான் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். போலீசார் விசாரணை நடத்தியதில், ஏற்கனவே 3 பேரை மணந்த நூர்ஜகான் 4வதாக புகழ்வேந்தனை திருமணம் செய்ய இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து புகழ்வேந்தன் மற்றும் கள்ளக்காதலி நூர்ஜகானை நேற்று கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
வீட்டில் தனியாக இருந்த 10ம் வகுப்பு மாணவியை மிரட்டி பலாத்காரம்: தொழிலாளிக்கு வலை
பலாத்காரம் செய்து ஆசிரியை கொலை ஏரிக்கரையில் நிர்வாணமாக புதைப்பு: 20 நாளுக்கு பிறகு ஆட்டோ டிரைவர் கைது
பெருங்குடியில் வக்கீல் படுகொலை: பிரபல ரவுடி சி.டி.மணியிடம் போலீசார் தீவிர விசாரணை
வேளச்சேரி தனியார் விடுதியில் இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்தவர் கைது
சீர்திருத்த பள்ளியில் சிறுவன் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
போதையில் கலாட்டா செய்தவர்களுக்கு ஆதரவாக போலீஸ் நிலையத்தில் புகுந்து தகராறு செய்த பாஜ நிர்வாகி கைது
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி