ஆவடி பொன்னியம்மன் கோயில் தெருவில் அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதி; பொதுமக்கள் புகார்
2022-08-24@ 00:53:03

ஆவடி: ஆவடி மாநகராட்சி உட்பட்ட 33வது வார்டு பொன்னியம்மன் கோயில் தெருவில் தண்ணீர் தொட்டி சேதமடைந்ததால் போதிய குடிநீரின்றி பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 33வது வார்டு பொன்னியம்மன் கோயில் தெருவில் சுமார் 1000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு 1000 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி இருந்தது. சமீபத்தில் பெய்த மழையால் அந்த தண்ணீர் சேதமடைந்தது.
மேலும் அங்கிருந்த மின் மோட்டார் பழுதானதுடன், மின்சார கம்பிகள் அறுந்தது.
இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் உப்பு தண்ணீரை பருகி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு உடல் உபாதைகள் வரும் அபாயமும் உள்ளது. மேலும் அப்பகுதியில் நீண்ட நாட்களாக மின்விளக்கு எரியவில்லை. சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமலும் அவதிப்படுகின்றனர். எனவே ஆவடி பொன்னியம்மன் கோயில் தெருவில் அடிப்படை வசதிகள் செய்துதர நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் முயற்சியாக அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு அழைப்பு!
பெரம்பூர் நகைக்கடை கொள்ளையில் மேலும் ஒருவர் கைது; 700 கிராம் தங்கம் பறிமுதல்
தந்தை சுப்பிரமணியம் மறைவை அடுத்து நடிகர் அஜீத்துக்கு நேரில் ஆறுதல் கூறினார் நடிகர் விஜய்
திமுக - அதிமுக இடையேதான் போட்டி என சட்டப்பேரவையில் கே.பி.முனுசாமி பேச்சு..!!
நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் முன்னாள் மாணவர்கள் பங்கேற்கலாம்: தலைமை செயலாளர் இறையன்பு தகவல்
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!