SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சோழவரம் ஒன்றியத்தில் சுடுகாடு அமைத்து தர வேண்டும்; கிராம மக்கள் கோரிக்கை

2022-08-23@ 00:53:14

புழல்: சோழவரம் ஒன்றியம், ஞாயிறு ஊராட்சிக்குட்பட்ட பசுவன்பாளையம் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பல ஆண்டுகளாக இங்கு சுடுகாடு வசதி இல்லை. இதனால் சுமார் 2 கிலோமீட்டர் தூரமுள்ள கண்ணியம்பாளையத்திற்கு சென்று, இறந்தவர்களை அடக்கம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, பசுவன்பாளையம் கிராமத்துக்கு சுடுகாடு அமைத்துத் தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்