SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடர் விடுமுறை காரணமாக கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்

2022-08-22@ 13:59:20

பெரியகுளம் : கிருஷ்ண ஜெயந்தி காரணமாக உருவான தொடர்விடுமுறையால் கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.பெரியகுளத்தில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானல் மலை அடிவாரத்தில் இயற்கை சூழலில் அமைந்துள்ள இந்த அருவிக்கு கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக நீர் வரத்து இருக்கும். இயற்கைச் சூழலில் அமைந்துள்ள இந்த அருவிக்கு மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

அருவிக்கான நீர் ஆதார பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை தென்மேற்கு பருவமழை பெய்தது. இதன் காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு தொடர் அரசு விடுமுறை என்பதால் அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. பலரும் குடும்பத்தினருடன் வந்து அருவியில் ஆனந்தமாக குளித்து செல்கின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்