அதிமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது கொடிவேரி அணையில் கான்கிரீட் தளம் சேதம்: மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது
2022-08-20@ 00:53:39

கோபி: கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் ரூ. 2.65 கோடியில் கட்டப்பட் கான்கிரீட் தளம் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. ஈரோடு மாவட்டம் கோபி அருகே பவானி ஆற்றில் கொடிவேரி அணை உள்ளது. கடந்த 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் சுற்றுலா வளர்ச்சி துறை சார்பில் ரூ.2.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அணையின் கீழ் பகுதியில் ஆழமுள்ள இடங்களில் சுமார் 100 மீட்டர் சுற்றளவில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு, பாதுகாப்பாக குளிக்க தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கன மழை காரணமாக அணைக்கு வந்த 25 ஆயிரம் கன அடி உபரி நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டது இதனால் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்ட 25 ஆயிரம் கன அடி உபரி நீரும் கொடிவேரி அணையில் இருந்து வெளியேறியது. இதில் ரூ.2 கான்கிரீட் தளம் முற்றிலும் அடித்து செல்லப்பட்டு மீண்டும் குழிகள் ஏற்பட்டுள்ளது. கான்கிரீட் தளம் அடித்து செல்லப்பட்ட தகவல் கிடைத்ததை தொடர்ந்து கான்கிரீட் தளம் அமைத்த ஒப்பந்ததார், ஹிட்டாட்சி இயந்திரத்தை வைத்து உடைந்த கான்கிரீட் துண்டுகளை அவசர அவசரமாக அப்புறப்படுத்தினார்.
Tags:
AIADMK rule Kodiveri dam concrete floor damage அதிமுக ஆட்சிக்கால கொடிவேரி அணை கான்கிரீட் தளம் சேதம்மேலும் செய்திகள்
இரண்டாம் நிலை காவலர் பணிக்கு இட ஒதுக்கீட்டின்படி எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டனர்? அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
தைப்பூச திருவிழா பழநி மலைக்கோயிலில் இன்று திருக்கல்யாணம்: நாளை தேரோட்டம்
சித்த மருத்துவ கல்லூரிகளில் முதலாண்டு வகுப்புகள் 20ம் தேதி தொடக்கம்
சூளகிரி அருகே எருதாட்டத்திற்கு அனுமதி மறுப்பு ஆயிரக்கணக்கான மக்கள் 5 மணி நேரம் மறியல்: 30 வாகனங்கள் உடைப்பு; போலீஸ் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு; 300 பேர் கைது
சுதந்திர போராட்ட தியாகி 101 வயதில் மரணம்
கொலை வழக்கில் கைதான ஏட்டு அதிரடி சஸ்பெண்ட்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!