திருச்சுழி அருகே சேதமடைந்துள்ள சுகாதார நிலையத்தை சீரமைக்க கோரிக்கை
2022-08-19@ 21:36:15

திருச்சுழி: திருச்சுழி அருகே சேதமடைந்த நிலையில் உள்ள சுகாதார நிலையத்தை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சுழி அருகே உள்ள காளையார்கரிசல்குளம் (மேற்கு) ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஒரு சில வீடுகளில் மட்டுமே கழிவறை உள்ளது. பெரும்பாலான மக்கள் திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்தி வருகின்றனர்.
காளையார் கரிசல்குளம் மேற்கு ஊராட்சியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சுகாதார வளாகம் தற்போது மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த சுகாதார வளாகத்தில் 6 கழிவறைகள் இருந்தும், தற்போது ஒரு கழிவறை மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. கட்டிடம் சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வயதானவர்கள் என பலரும் சுகாதார வளாகம் இல்லாததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த சுகாதார வளாகத்திற்குள் விஷ ஜந்துகள் அடிக்கடி வருவதால் பொதுமக்கள் இந்த வளாகத்திற்குள் நுழையவே அச்சப்படுகின்றனர். எனவே சேதமடைந்துள்ள இந்த சுகாதார வளாக கட்டிடத்தை முழுமையாக இடித்து அகற்றிவிட்டு, புதிய சுகாதார வளாகம் கட்டி தர வேண்டும் என இக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
நெடும்பலம் அரசு விதை பண்ணையில் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த மாப்பிள்ளை சம்பா நெற்கதிர் சாய்ந்தது
`ஸ்மார்ட் சிட்டி' புதிய கட்டுமான பணிக்காக பாளை. மார்க்கெட்டில் கடைகள் இடித்து அகற்றம்: வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க எல்லைப் பகுதியில் வருவாய்த்துறை சோதனைச்சாவடி அமைக்கப்படுமா? தேனி மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு
உலகில் முதலில் எழுத்தறிவு பெற்றது தமிழ் சமூகம் தான்' விரகனூர் கல்லூரியில் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் பேச்சு
பொள்ளாச்சி வழியாக பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ‘ரிப்ளெக்டர் ஸ்டிக்கர்’: வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வழங்கல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!