வீடுகளின் முன்பு நிறுத்திய 10க்கும் மேற்பட்ட கார் கண்ணாடி உடைப்பு: போதை ஆசாமிகளுக்கு வலை
2022-08-19@ 00:10:47

அம்பத்தூர்: அம்பத்தூர் இந்தியன் வங்கி காலனி மாயா தெருவில் பலர் தங்களின் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை வீடுகளின் முன்பு நிறுத்தி வைப்பது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட கார்களின் கண்ணாடிகள், இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் உடைத்து சென்றுள்ளனர். காலையில் இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அதன் உரிமையாளர்கள் இதுபற்றி அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்தபோது, அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் போதையில் கார் கண்ணாடிகள் மற்றும் இருசக்கர வாகனங்களை உடைத்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவான அவர்களை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
விபச்சார வழக்கில் அதிமுக மகளிரணி நிர்வாகி கணவருடன் கைது: விருதுநகரில் பரபரப்பு
திருப்பூர் சம்பவம்: பீகாரை சேர்ந்த ரஜட்குமார், பரேஷ்ராம் ஆகிய 2 பேர் 3 பிரிவுகளில் கைது
சரக்கு ஆட்டோவில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்-டிரைவர் கைது
கூடலூரில் கஞ்சாவை வீட்டில் பதுக்கி விற்ற 3 பெண்கள் உட்பட 7 பேர் கைது
கொடிவேரி அணை பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது
வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தந்தை கைது
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!