மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
2022-08-18@ 14:58:38

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாகவே 49 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தான் செயல்பட்டு வந்தன. அவற்றிலும் 35 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நேற்றுடன் மூடப்பட்டு விட்டன. இனி 14 நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டும் தான் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் நெல் பயிரிடப்படும் பரப்பு, சாகுபடி செய்யப்படும் அளவு ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது, அங்கு அமைக்கப்பட்டிருக்கும் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. கடந்த பிப்ரவரி மாதத்தில் 20 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. அடுத்த 6 மாதங்களில் அவற்றில் 13 கொள்முதல் நிலையங்களும், ஏற்கனவே செயல்பட்டு வந்த 29 நெல் கொள்முதல் நிலையங்களில் 22 நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நெல் உற்பத்தித் திறனில் முதலிடத்தில் இருப்பது விழுப்புரம் மாவட்டம் தான். அங்கு ஒரு ஹெக்டேரில் 4,490 கிலோ நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இது தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களின் சராசரி உற்பத்தித் திறனை விட ஒரு டன் அதிகமாகும்.
இதை மனதில் கொண்டு, உழவர்களின் நலனைக் காக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டத்திலும், பிற மாவட்டங்களிலும் மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டுக்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்வீட்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது: தென்தமிழகம் , வடதமிழக மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம் தகவல்
வட்டிக்கு பணம் வாங்கிய பிரச்னையில் மூதாட்டியை கொடூரமாக கொன்ற ஆயுதப்படை போலீஸ்காரர் கைது: போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்கள்
பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசுவை ஆதரிக்க பாஜக தயார்.! அதிமுக பிரிந்து போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு குறையும்: அண்ணாமலை பேட்டி
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தமிழரசு இதழின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “இலக்கிய மலர் 2023”: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.!
விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கங்களின் சார்பில் ரூ.5 கோடி பங்களிப்பு நிதி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினார்கள்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!