கூடலூர் அருகே தேசிய நெடுஞ்சாலை தேயிலை தோட்டம் மற்றும் வீடுகளில் திடீர் விரிசல்: மக்கள் அச்சம்...
2022-08-18@ 11:52:15

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேசிய நெடுஞ்சாலை தேயிலை தோட்டம் மற்றும் வீடுகளில் திடீர் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளன. கூடலூர் உதகை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தெய்வமலை செல்லும் சாலையில் சுமார் 70மீட்டர் தூரத்திற்கு திடீர் விரிசலும், 10 செ.மீ. ஆழத்திற்கு பள்ளமும் ஏற்பட்டுள்ளது. அதேபோல நடுக்கூடலூர் பகுதியில் 20கும் மேற்பட்ட வீடுகளில் பெரிய அளவிலான விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் கிராமத்தினர் அச்சம் அடைந்துள்ளனர். இந்த இடங்களில் புவியியல் துறை அதிகாரிகள் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டனர்.
இந்திய மண்வள ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி மணிவண்ணனும் ஆய்வில் ஈடுப்பட்டார். சமீபத்தில் பெய்த தொடர் கனமழையால் நிலத்திற்கு அடியில் நீரோட்டம் அதிகரித்ததன் காரணமாக இந்த விரிசல்கள் ஏற்பட்டிருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நீரோடைகள் மாற்று பாதைகளில் திருப்பவில்லை என்றால் பாதிப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும், சேதம் அடைந்த வீடுகளை முழுவதுமாக இடித்து விட்டு புதிய வீடுகளை கட்டுவது தான் பாதுகாப்பு என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் செய்திகள்
கோடியக்கரை சரணாலயத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
சிவகங்கை மாவட்டத்தில் பெண் வாக்காளர்கள் தொடர்ந்து அதிகரிப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் முதன் முறையாக தேசிய அளவிலான பைக் ரேஸ்..!!
அரியலூரில் செந்துறை அருகே உள்ள வரதராஜபெருமாள் கோயிலில் திருடப்பட்ட சிலை 11 வருடத்துக்கு பின் மீட்பு..!!
புதுச்சேரியில் ரேஷன் கடைகளைத் திறக்க ஒன்றிய அரசு, ஆளுநரிடம் அனுமதி கேட்டுள்ளோம்: சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி தகவல்
20 கி.மீ.தொலைவிற்கு ஒருமதுபான கடைதான் உள்ளது என கூற மதுபானம் அத்தியாவசிய பொருளா?.. ஐகோர்ட் கிளை கேள்வி
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!