தோவல் வீட்டு பாதுகாப்பில் ஈடுபட்ட 3 வீரர்கள் டிஸ்மிஸ்
2022-08-18@ 00:37:19

புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் பரிந்துரையின்படி மத்திய தொழில் பாதுகாப்பு படையின் (சிஐஎஸ்எப்) கீழ் செயல்படும், விவிஐபி.க்களுக்கான சிறப்பு பாதுகாப்பு குழு அவருக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது. இந்நிலையில், பாதுகாப்பு மிகுந்த அஜித் தோவலின் டெல்லி வீட்டிற்குள் பெங்களூருவை சேர்ந்த இளைஞர் கடந்த பிப்ரவரி 16ம் தேதி பாதுகாப்பு விதிகளை மீறி காரில் உள்ளே செல்ல முயன்றார். இது தொடர்பாக அன்றைய தினம் விவிஐபி. பாதுகாப்பு பணியில் இருந்த 3 வீரர்கள் மற்றும் டிஐஜி, மூத்த அதிகாரியிடம் சிஐஎஸ்எப். விசாரணை நடத்தியது. பின்னர், வீட்டு பாதுகாப்பில் இருந்த 3 வீரர்களை பணி நீக்கம் செய்தும், 2 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும் உத்தரவு பிறப்பித்தது. இந்த தகவலை சிஐஎஸ்எப் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
சமீபத்தில் மோடியால் தொடங்கப்பட்ட ‘வந்தே பாரத்’ ரயிலில் குப்பை: பயணிகள் மீது ஐஏஎஸ் அதிகாரி கோபம்
கவுகாத்தி உயர்நீதிமன்றத்திற்கு ‘ஜீன்ஸ் பேண்ட்’ அணிந்து வந்த வக்கீல் வெளியேற்றம்: நீதிபதி அதிரடி உத்தரவு
கொலீஜியம் குறித்த விவகாரம்; நீதித்துறை வீழ்ந்தால் நாடு படுகுழியில் விழும்!: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கருத்து
பணமோசடி வழக்கில் சிக்கிய சுகேஷை சிறையில் சந்தித்தேன்!: நடிகை சாஹத் கன்னா பகீர் பேட்டி
அமைச்சராவேன் என்று கனவு கூட கண்டதில்லை!: வெளியுறவு அமைச்சர் பேச்சு
பாரம்பரியங்களை பாதுகாப்பதில் பழங்குடி சமூகத்தினர் எப்போதும் ஆர்வமுடன் உள்ளனர்: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!