ஐகோர்ட் கிளையில் மனு தள்ளுபடி துப்பாக்கி வைக்கும் உரிமத்தை உரிமையாக கேட்க முடியாது
2022-08-18@ 00:07:41

மதுரை: துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான உரிமத்தை உரிமையாக கேட்க முடியாது எனக்கூறியுள்ள ஐகோர்ட் கிளை, மனுவை தள்ளுபடி செய்தது. நெல்லையைச் சேர்ந்த மனோகரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கான்ட்ராக்டராக உள்ளேன். மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் விவசாய நிலங்கள் உள்ளன. இதனால், விலங்குகள் தொல்லை உள்ளது. எனவே, எனக்கு துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதை ரத்து செய்து எனக்கு துப்பாக்கி உரிமம் வழங்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.விஜயகுமார், ‘‘நெல்லை மாவட்டத்தில் சமூகரீதியாக பிரச்னை இருப்பதால், பொது அமைதி மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மனுதாரரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. மனுதாரரின் தந்தை ஏற்கனவே துப்பாக்கி உரிமம் பெற்றுள்ளார். இருவரும் ஒரே குடும்பம் தான். எனவே, மனுதாரருக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான உரிமத்தை உரிமையாக கோர முடியாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
இரண்டாம் நிலை காவலர் பணிக்கு இட ஒதுக்கீட்டின்படி எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டனர்? அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
தைப்பூச திருவிழா பழநி மலைக்கோயிலில் இன்று திருக்கல்யாணம்: நாளை தேரோட்டம்
சித்த மருத்துவ கல்லூரிகளில் முதலாண்டு வகுப்புகள் 20ம் தேதி தொடக்கம்
சூளகிரி அருகே எருதாட்டத்திற்கு அனுமதி மறுப்பு ஆயிரக்கணக்கான மக்கள் 5 மணி நேரம் மறியல்: 30 வாகனங்கள் உடைப்பு; போலீஸ் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு; 300 பேர் கைது
சுதந்திர போராட்ட தியாகி 101 வயதில் மரணம்
கொலை வழக்கில் கைதான ஏட்டு அதிரடி சஸ்பெண்ட்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!