சென்னை ஓசோன் கேபிடல் நிதி நிறுவனத்தில் கத்தி முனையில் 30 லட்சம் கொள்ளை: போலீஸ் விசாரணை
2022-08-17@ 12:54:33

சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வங்கியில் 32 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி சுமார் 72 மணி நேரத்தில் 32 கிலோ தங்க நகைகளை மீட்டு உள்ளனர். இந்நிலையில் இதேபோல் சென்னையில் நிதி நிறுவனம் ஒன்றில் 30 லட்சம் ரூபாயை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
சென்னையில் உள்ள 'ஓசோன் கேபிடல்' நிதி நிறுவனத்தில் ஊழியர்களை கட்டிப்போட்டு 30 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வடபழனி மன்னார் முதலி தெருவில் உள்ள இந்த நிதி நிறுவனத்தில் ஏழு பேர் அடங்கிய கும்பல் முகமூடியுடன் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். ஊழியர்கள் தீபக், சஞ்சீவ் குமார் ஆகியோரை கத்தி முனையில் கட்டிப்போட்டு இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த கொள்ளையில் தொடர்புடைய விருகம்பாக்கத்தைச் சேர்ந்த இக்பால் என்ற நபர் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய மற்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னையில் மீண்டும் ஒரு நிதி நிறுவனத்தில் 30 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகள்
கோவையில் ரூ10.82 லட்சம் மதிப்புள்ள 157 கிலோ கஞ்சா சாக்லேட் சிக்கியது: வட மாநில வியாபாரி கைது
ஐடி நிறுவனங்களில் வேலை தருவதாக கூறி நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து இளம்பெண்களை ரூ.1 லட்சத்திற்கு விற்ற பாலியல் புரோக்கர் அதிரடி கைது: 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
சவுகார்பேட்டையில் அதிகாலை பரபரப்பு சம்பவம் ஆந்திர நகை வியாபாரிகளிடம் ரூ.1.40 கோடி கொள்ளை: போலீஸ் எனக்கூறி காரில் வந்து கைவரிசை
ஆபாச வீடியோவை வாட்ஸ்அப்பில் பரப்பி விடுவோம் என சிறைக்கு சென்று வந்தவர்களிடம் ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது: பாஜ நிர்வாகி என கூறி மோசடிக்கு முயற்சி
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விலை உயர்ந்த கேமரா திருடிய 2 பேர் கைது
முன் விரோத தகராறில் வாலிபரை வெட்டி கொல்ல முயற்சி: 7 பேர் கைது
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!