3.5 கிமீ நீளமுள்ள சரக்கு ரயில் சூப்பர் வாசுகியின் சோதனை வெற்றி: 27,00 டன் நிலக்கரியுடன் பயணம்
2022-08-17@ 00:03:51

புதுடெல்லி: இந்தியாவின் மிக நீளமான சரக்கு ரயிலான ‘சூப்பர் வாசுகி’யில், 27,000 டன் நிலக்கரியுடன் வெற்றிகரமாக சோதனை ஓட்டம் முடிந்துள்ளது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் சட்டீஸ்கர் மாநிலத்தின் கோர்பாவில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரில் உள்ள ராஜ்நந்த்காவ் இடையே 295 வேகன்களில் 27,000 டன் நிலக்கரியை ஏற்றி கொண்டு 3.5 கிமீ நீளமுள்ள ‘சூப்பர் வாசுகி’ சரக்கு ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. இந்த ரயில் கோர்பாவில் இருந்து 1.50 மணிக்கு புறப்பட்டு, 267 கிமீ தூரத்தில் உள்ள ராஜ்நந்த்காவை சென்றடைய மறுநாள் நண்பகல் 11.20 மணியானது. இந்திய ரயில்வேவால் இதுவரை இயக்கப்பட்ட மிக நீளமான, கனமான சரக்கு ரயில் இதுவாகும். இந்த ரயில் ஒரு நிலையத்தை கடக்க 4 நிமிடங்களாகும். ‘சூப்பர் வாசுகி’ எடுத்துச் செல்லும் நிலக்கரியின் மூலம், ஒருநாள் முழுவதும் 3,000 மெகாவாட் மின் உற்பத்தியை செய்யலாம். 5 சரக்கு ரயில்களை ஒரே ரயிலாக இணைத்து இந்த ரயில் உருவாக்கப்பட்டுள்ளது.
Tags:
3.5 km long freight train Super Vasuki trial run 27 00 tonnes of coal journey 3.5 கிமீ நீளமுள்ள சரக்கு ரயில் சூப்பர் வாசுகி சோதனை வெற்றி 27 00 டன் நிலக்கரி பயணம்மேலும் செய்திகள்
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய சோகாதாரத்துறை கடிதம்
36 செயற்கைகோளுடன் LVM3-M3 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ள நிலையில், அதற்கான 24 மணிநேர கவுன்ட்டவுன் தொடங்கியது!!!
இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை தகுதி நீக்க நடவடிக்கையில் சிக்கிய தலைவர்கள்..!!
மகாத்மா காந்தி எந்த பல்கலைக்கழகத்திலும் படித்து பட்டம் பெறவில்லை: ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் கருத்தால் சர்ச்சை
எம்.பி. பதவி பறிப்பு எதிரொலி.. அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு ஒரு மாதம் கெடு!
வழக்குகளில் தண்டனை பெற்ற உடனே எம்.பி., எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி