நிதி அமைச்சர் கார் மீது காலணி வீசிய 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது; சிறையில் அடைப்பு
2022-08-16@ 14:57:01

மதுரை: மதுரை விமான நிலையத்தில் நிதி அமைச்சர் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த சரண்யா உள்பட 3 பெண்கள் உட்பட 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ முகாம் மீது நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் மதுரை மாவட்டத்தை ேசர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் வீர மரணமடைந்தார். அவரது உடல் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அப்போது, ராணுவ வீரரின் உடலுக்கு, நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விமான நிலையத்தில் வைத்து மலர் அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பினார். அப்போது, பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் அமைச்சரின் கார் மீது காலணியை வீசி தகராறில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரை முதற்கட்டமாக அவனியாபுரம் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர். அமைச்சர் கார் மீது காலணி வீசிய பெண் குறித்தும், அவருடன் வந்தவர்கள் குறித்தும் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் சீனிவாச பெருமாள், தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் முருகன், எஸ்ஐ சண்முகநாதனை கொண்ட தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
தனிப்படை போலீசார் அங்கு பதிவான வீடியோ காட்சிகள் மூலம் தலைமறைவாக இருந்தவர்களை தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் தேடி வந்தனர். இந்நிலையில், தனிப்படை போலீசார் திருமங்கலம் அருகேயுள்ள வாகைக்குளத்தில் பதுங்கியிருந்த மதுரை விளாங்குடியை சேர்ந்த சரண்யா, தனலட்சுமி, தெய்வானை ஆகிய 3 பெண்களையும் கைது செய்து, தல்லாகுளம் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து திருச்சி தொழிலதிபர் ஜெய் கருணா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
புதுவையில் ஜி20 மாநாட்டில் 17 நாட்டு விஞ்ஞானிகள் கலந்துரையாடல்: இன்று ஆரோவில் செல்கின்றனர்
மகளிடம் காதலிக்க வற்புறுத்திய வாலிபர் தட்டிக்கேட்ட சிறை காவலர் மீது கொலை வெறி தாக்குதல்: கும்பலை கைது செய்யக்கோரி 3 மணி நேரம் மறியல்; குழந்தையுடன் 3 பெண்கள் தற்கொலை முயற்சி
பணி நியமனத்தில் முறைகேடு சேலம் பெரியார் பல்கலையில் அரசு குழு விசாரணை துவக்கம்: 2 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க ஆணை
அரசு துறைகளின் அதிரடி நடவடிக்கையால் 80 ஆண்டு தீண்டாமை முடிவுக்கு வந்தது: அம்மன் கோயிலில் பொங்கலிட்டு பட்டியலின மக்கள் வழிபாடு
சர்க்கரை நோய் பாதிப்பால் 8 மாத குழந்தை உயிரிழப்பு
நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ்: கண்ணாடியை உடைத்து தப்பிய பயணிகள்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!