சிறுத்தையிடம் கடி வாங்கிய பின் செத்தது போல் நடித்து உயிர் தப்பிய நாய்
2022-08-15@ 16:51:07

உடுப்பி: கர்நாடகா மாநிலம் உடுப்பி அடுத்த மணிப்பால் பல்கலைகழகத்திற்கு எதிரே உள்ள குடியிருப்புக்குள் சிறுத்தை புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. வீட்டின் ஒன்றில் புகுந்த சிறுத்தை, அந்த வீட்டின் முன்புள்ள ஊஞ்சலுக்கு அடியில் பதுங்கியிருந்தது. சுமார் ஒன்றரை நிமிடம் அந்த சிறுத்தை பதுங்கியிருந்தது. அப்போது வீட்டின் உரிமையாளர் ராமச்சந்திர கெடிலயாவின் வளர்ப்பு நாய் டோமி மீது அந்த சிறுத்தை திடீரென பாய்ந்தது. நாயின் கழுத்தை லாவகமாக சிறுத்தை கவ்வியது. அடுத்த சில நொடிகளில் எவ்வித கூச்சலுமின்றி அந்த நாய் இறந்தது போல் மயக்கமடைந்தது.
அதனால் சிறுத்தை தனது பிடியில் இருந்து நாயை கீழே விட்டது. இதற்கிடையில், வீட்டின் உரிமையாளர் ராமச்சந்திர கெடிலயா, சிறுத்தை உருட்டும் சப்தம் கேட்டு விளக்குகளை போட்டார். உஷாரான சிறுத்தை, நாயை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியது. இதை பார்த்த ராமச்சந்திர கெடிலயா, தனது வளர்ப்பு நாய்க்கு என்ன ஆனது? என்று அருகில் சென்று பார்த்தார். அப்போது அந்த நாய் எவ்வித பாதிப்பும் இல்லாதது போல், எழுந்து நின்றது. மகிழ்ச்சியடைந்த ராமச்சந்திர கெடிலயா, சிறுத்தையால் லேசான காயமடைந்த தனது வளர்ப்பு நாயை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிறது. செத்தது போல் நடித்து சிறுத்தையிடம் இருந்து உயிர்தப்பிய நாயை பலரும் பாராட்டுகின்றனர்.
மேலும் செய்திகள்
திருப்பதியில் 8 மணிநேரத்தில் ஏழுமலையான் தரிசனம்
இலியானாவுக்கு என்ன நோய்?..மருத்துவமனையில் திடீர் அட்மிட்
ராஜமவுலி, தனுஷ் வெளியிட்ட தசரா டீசர்
ஒரு வருடத்துக்கு பிறகு மகளின் முகத்தை காட்டினார் பிரியங்கா
தொடர் தோல்விகளால் ஓட்டல் தொழிலுக்கு மாற இருந்தேன்; ஷாருக்கான் பளிச்
ஆன்லைன் பரிசோதனையின் போது பெண் டாக்டர் முன் நிர்வாண போஸ்: வாலிபர் கைது
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!