எகிப்து சர்ச்சில் தீ விபத்து 41 பேர் பலி
2022-08-15@ 00:53:07

கெய்ரோ: எகிப்து தலைநகர் கெய்ரோவில் அபு செவெயின் பகுதியில் காப்டிக் தேவாலயம் அமைந்துள்ளது. இங்கு நேற்று காலை ஞாயிற்றுக் கிழமை பிரார்த்தனை நடந்து கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 41 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் 14 பேர் காயமடைந்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த 15 தீயணைப்பு வண்டிகள், நீண்ட நேரப் போராட்டத்துக்கு பின்னர் தீயை அணைத்தன.
காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். ஆனால், சுகாதார அமைச்சகம் காயமடைந்த 55 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறியுள்ளது. தேவாலயத்தின் 2வது மாடியில் மின் கசிவினால் குளிர்சாதனப் பெட்டி வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டதாக எகிப்து உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காப்டிக் தேவாலயத்தின் போப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
ரஷ்ய குண்டு வீச்சில் 5 பேர் பலி
சீனாவில் நிலநடுக்கம்
இங்கிலாந்து மீது ஏவுகணை தாக்குதல் ரஷ்ய அதிபர் புடின் மிரட்டல்: இங்கிலாந்து மாஜி பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிர்ச்சி தகவல்
ஆஸி.யில் காலிஸ்தான் வாக்கெடுப்பில் மோதல்: நடவடிக்கை எடுக்க இந்தியா கோரிக்கை
அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகருடன் அஜித் தோவல் இன்று பேச்சுவார்த்தை
பாக். நாடாளுமன்ற இடைத்தேர்தல் 33 தொகுதிகளிலும் இம்ரான் போட்டி
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!