போதைப்பொருள் வழக்கில் மெத்தனம் சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் மீது கடும் நடவடிக்கை: மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் எச்சரிக்கை
2022-08-14@ 00:23:50

சென்னை: போதைப்பொருள் தடுப்பு வழக்குகளில் ஆஜராகும் சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், அந்த வழக்கை சரியாக நடத்தவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை குற்றவியல் வழக்கறிஞர் எச்சரித்துள்ளார்.
மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற அரசு சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்கள் மற்றும் அரசு கூடுதல் சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்கள் ஆகியோருக்கான அவசரக் கூட்டம் தமிழ்நாடு அரசு தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தலைமையில் நேற்று நடைபெற்றது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 10ம் தேதி நடந்த நடைபெற்ற போதைப் பொருள் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் போதைப் பொருள் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்த விஷயத்தில் காவல்துறையில் உள்ளவர்கள் தவறு செய்யக் கூடாது. தவறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். எனவே, அலட்சியமாக, கவனக்குறைவாக, வேறு சில காரணங்களுக்காக வழக்கை சரிவர நடத்தவில்லையென்றால் அரசு வழக்கறிஞர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை பாயும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
Tags:
Narcotics Sobriety Special Public Prosecutors State Chief Criminal Prosecutor Caution போதைப்பொருள் மெத்தனம் சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் எச்சரிக்கைமேலும் செய்திகள்
கன மழை காரணமாக நெற்பயிர் பாதித்த உழவர்களுக்கு உரிய இழப்பீடு அன்புமணி வலியுறுத்தல்
அண்ணா நினைவுநாளையொட்டி இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை
4 லட்சம் பேர் எழுதுகின்றனர் ஆசிரியர் தகுதித்தேர்வு தொடங்கியது: சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு
குற்ற வழக்குகளில் மின்னணு ஆதாரங்களை சேகரிப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்
எல்.ஐ.சி, எஸ்பிஐ அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் சார்பில் 6ம் தேதி ஆர்ப்பாட்ட பேரணி: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
இந்திய சினிமாவின் பழம்பெரும் இயக்குனர் கே.விஸ்வநாத் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!