உத்திரமேரூர் அருகே புதுப்பிக்கப்பட்ட நூலகம் திறக்கப்பட வேண்டும்; கிராம மக்கள் கோரிக்கை
2022-08-13@ 01:15:27

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே புதுப்பிக்கப்பட்ட நூலகம் திறக்கப்பட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். உத்திரமேரூர் அடுத்த அரசாணிமங்கலம் கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கடந்த 2007ம் ஆண்டு புதியதாக நூலகம் அமைக்கப்பட்டது. இந்த நூலகத்தில் அரசாணிமங்கலம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள், மாணவ - மாணவிகள் என அனைத்து தரப்பினர்களும் பயன்பெற்று வந்தனர். இந்த நூலகத்தில் பல்வேறு வகையிலான சிறப்புமிக்க புத்தகங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நூலகம் திறக்கப்படாமல் பூட்டியே இருந்தது.
இதனால், நூலக கட்டிடத்திற்கு உள்ளே உள்ள புத்தகங்கள் பாழாகியது. இதுமட்டுமின்றி இந்த நூலகத்தின் கட்டிடமும் பழுதடைந்து காணப்பட்டது. இந்நிலையில், இந்த நூலகத்திற்கு அண்மையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.1 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு தற்போது புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. எனினும், நூலகத்தில் இருந்த புத்தகங்கள் பல ஆண்டுகளாக உபயோகிக்காமல் இருந்ததால் பல புத்தகங்கள் வீணாகி போனது. எனவே, மாவட்ட நிர்வாகம் சம்மந்தபட்ட துறையினருக்கு உத்தரவிட்டு சீரமைக்கப்பட்ட இந்த நூலகத்திற்கு தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் மூலம் புதிய புத்தகங்கள் வழங்கி நூலகத்திற்கு நூலகரை நியமித்து உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கொடைக்கானலுக்கு வரும் வெளியூர் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் உயர்ந்தது
ரூ.784 கோடியில் பள்ளி வகுப்பறைகள் கட்டும் பணி தொடக்கம் கல்வியும், மருத்துவமும் இரண்டு கண்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
குடிநீர் தொட்டியில் இன்ஜினியர் சடலம் மீட்பு அமைச்சர், டிஐஜி நேரில் விசாரணை
தாலி கட்டும் நேரத்தில் மணமகன் ஓட்டம் மண்டபத்துக்கு வந்தவர் மாப்பிள்ளை ஆனார்
விஐடி பல்கலையில் கலைஞர் மாணவர் விடுதி, பேர்ல் ஆராய்ச்சி கட்டிடம் திறப்பு தமிழகத்தில் மாபெரும் கல்வி புரட்சி: தனியார் கல்வி நிறுவனங்களும் பங்களிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
திருப்பூரில் வட இந்தியர்கள் உள்ளூர் ஆட்களிடம் சண்டையில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு.!
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!