தேஜஸ்வி யாதவுக்கு ‘இசட்’ பாதுகாப்பு
2022-08-13@ 01:00:51

பாட்னா: பீகாரில் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவிற்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்குவதற்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது. பீகாரில் பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளுடன் மீண்டும் கூட்டணி அமைத்து முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இந்த கூட்டணி அரசில் லாலு பிரசாத் யாதவின் மகனும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ், துணை முதல்வராக பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில், தேஜஸ்விக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்குவதற்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை மாநில காவல்துறை இயக்குனர் ஜெனரலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாஜ. மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான சுசில் மோடி கூறுகையில், ‘அவர்களுக்கு ஏன் அதிகபட்ச பாதுகாப்பு தேவை? அவர்கள் ஆட்சிக்கு வந்ததால் மக்கள்தான் அச்சத்தில் இருக்கிறார்கள்,’ என்றார்.
மேலும் செய்திகள்
திருப்பதியில் 8 மணிநேரத்தில் ஏழுமலையான் தரிசனம்
இலியானாவுக்கு என்ன நோய்?..மருத்துவமனையில் திடீர் அட்மிட்
ராஜமவுலி, தனுஷ் வெளியிட்ட தசரா டீசர்
ஒரு வருடத்துக்கு பிறகு மகளின் முகத்தை காட்டினார் பிரியங்கா
தொடர் தோல்விகளால் ஓட்டல் தொழிலுக்கு மாற இருந்தேன்; ஷாருக்கான் பளிச்
ஆன்லைன் பரிசோதனையின் போது பெண் டாக்டர் முன் நிர்வாண போஸ்: வாலிபர் கைது
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!