விஷம் கொடுத்து தாயை கொன்று மகன் தற்கொலை
2022-08-12@ 14:51:15

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நடராஜ பிள்ளை தெரு ஜீயர் தோப்பை சேர்ந்தவர் கோமளவள்ளி(80). இவரது மகன் ரவிச்சந்திரன்(56). திருமணம் செய்து கொள்ளாத இவர், நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலத்தில் உள்ள பண்ணையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதித்த நிலையில் இருந்த தனது தாய் கோமளவள்ளியை பார்ப்பதற்காக ரவிச்சந்திரன் கடந்த 10 நாட்களுக்கு முன் மன்னார்குடியில் உள்ள வீட்டுக்கு வந்தார். ஒருபுறம் தனக்கும் திருமணமாகவில்லை, மறுபுறம் உடல்நிலை பாதித்த தாயை பார்த்து கொள்ள உறவினர்கள் யாரும் இல்லை என்ற ஏக்கத்தில் ரவிச்சந்திரன் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ரவிச்சந்திரன் வீட்டில் இருந்த குருணை மருந்தை தனது தாய்க்கு கொடுத்து விட்டு தானும் குடித்தார். சிறிது நேரத்தில் அடுத்தடுத்து, இருவரும் இறந்தனர். நேற்று காலை நீண்ட நேரமாக இவரது வீட்டில் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்து மன்னார்குடி நகர காவல் நிலையத்துக்கு மக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை: தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு
வி.சி.க நிர்வாகி கொலை
களைகட்டும் தைப்பூச திருவிழா பழநியில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
சட்டப்பிரிவு 20ன் படி இந்திய குடிமகன் அல்லாதவருக்கும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: குண்டு பாய்ந்து குமரி மீனவர் படுகாயம்
ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!