பைக்கில் இருந்து தவறி விழுந்த 7 மாத பெண் குழந்தை சாவு; திருவள்ளூர் அருகே பரிதாபம்
2022-08-12@ 00:51:47

திருவள்ளூர்: பைக்கில் சென்றபோது தாயின் மடியில் இருந்து தவறிவிழுந்த 7 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் அருகே கீழச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் குணா(29). இவர் தனியார் நிறுவன ஊழியர். இவரின் மனைவி முத்தமிழ் ( 26). இவர்களுக்கு ஜோசன் (3) மகன் உள்ளார். மேலும் இவர்களுக்கு லூவி டெரினா என்ற 7 மாத பெண் குழந்தை இருந்தது. கடந்த மாதம் 27ம் தேதி, குணா மனைவி, குழந்தைகளுடன் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வை எழுதுவதற்காக பைக்கில் திருவள்ளூர் அருகே கே.ஜி. கண்டிகை மேல்நிலைப் பள்ளிக்குச் சென்றனர். தேர்வு எழுதி முடித்துவிட்டு மீண்டும் அவர்கள் வீடு நோக்கி வந்தனர்.
திருவள்ளூர் அருகே பேரம்பாக்கம் புற்றுக்கோயில் சாலையில் உள்ள வளைவில் திரும்பும்போது பைக் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது முத்தமிழ் மடியில் இருந்த 7 மாத குழந்தை லூவி டெரினா தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்கம் அடைந்தது. உடனடியாக குழந்தையை பேரம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு பெண் குழந்தை லூவிடெரினா பரிதாபமாக இறந்தது. இதுபற்றி திருவள்ளூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
உள்வாடகைக்கு விட்டதால் ரூ.20 கோடி மதிப்பு கோயில் கடைக்கு சீல்
கருத்துரிமையை பறிக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ரவுடிகள் செல்போனை பறித்ததால் 4 கார் கண்ணாடிகளை உடைத்த போதை ஆசாமி: பொதுமக்கள் அடித்து உதைத்தனர்
பர்னிச்சர் குடோனில் தீ விபத்து: 4 மணி நேரம் போராடி அணைப்பு
தனியார் பேருந்து மோதி இந்திரா காந்தி சிலை உடைந்ததால் பரபரப்பு
சொத்துவரி கட்டாத 6 கடைகளுக்கு சீல்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!