விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல்
2022-08-12@ 00:16:05

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் சிறையில் இருந்த நிலையில், பேரறிவாளனை கடந்த மே மாதம் 18ம் தேதி உச்ச நீதிமன்றம் தன்னுடைய தனிப்பட்ட சட்டப்பிரிவு 142 அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்தது. இந்நிலையில், நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘சிறையில் நளினி நன்னடத்தையுடன் இருக்கிறார். சிறையில் இருந்து வெளியே வந்தாலும் அவரால் எந்தவித தீங்கும் ஏற்படாது. சமுதாயத்திற்கு எதிர்மறையாகவும் செயல்பட மாட்டார். அதனால், இவற்றை கருத்தில் கொண்டு பேரறிவாளனை விடுதலை செய்தது போன்று, இவ்வழக்கில் இருந்து நளினியையும் விடுதலை செய்ய வேண்டும். அதற்கு முன்பாக, அவருக்கு இடைக்கால ஜாமீனும் வழங்க வேண்டும்,’ என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
விவசாயிகள் ஆளும் காலம் வந்து விட்டது: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பேச்சு
பொது சிவில் சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது: அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கண்டனம்
பணமதிப்பிழப்பு தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு
ஆன்லைன் சூதாட்டம், கடன் சேவை 232 சீன ஆப்களுக்கு ஒன்றிய அரசு தடை
நாட்டின் இளைஞர்களால் முடியாதது எதுவுமில்லை: பிரதமர் மோடி பேச்சு
சபரிமலையில் மலை போல் குவிந்த நாணயங்கள் எண்ணும் பணி மீண்டும் தொடங்கியது: 520 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!