ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை கோரி உச்சநீதிமன்றத்தில் நளினி மனுத்தாக்கல்: இடைகால ஜாமீன் வழங்க கோரிக்கை..!!
2022-08-12@ 16:41:32

டெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் நளினி மனுத்தாக்கல் செய்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி நளினி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தன்னுடைய தாய் பத்மாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை கவனித்துக்கொள்ள பரோலில் வெளியே வந்த நளினி, காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். தினந்தோறும் காட்பாடி காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு வருகிறார்.
தற்போது அவருக்கு நளினிக்கு 7வது முறையாக ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் நளினி மனுத்தாக்கல் செய்துள்ளார். தன்னை சிறையில் இருந்து விடுவிக்ககோரிய மனு மீது விசாரணை நடத்தி முடிக்கும் வரை இடைகாலமாக தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் எனவும் மனுவில் நளினி கோரிக்கை விடுத்துள்ளார். பேரறிவாளன் விடுதலை வழக்கின் தீர்ப்பில் உள்ள அம்சங்களை சுட்டிக்காட்டியே நளினி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தான் பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருந்தார். அந்த அடிப்படையிலேயே நளினியும் விடுதலை கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் பேரறிவாளன் மீதான குற்றச்சாட்டு, நளினி மீதான குற்றச்சாட்டு, மற்ற ஐவர் மீதான குற்றச்சாட்டு போன்றவை எல்லாம் வேறுபடுத்தி பார்க்கப்படுகிறதா? என்பது நீதிமன்ற விசாரணையில் தெரியவரும். ரவிசந்திரன், முருகன் உள்ளிட்டோரும் இதே காலகட்டத்தில் மனுத்தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.
மேலும் செய்திகள்
தென் தமிழகத்தில் நாளை, நாளை மறுதினம் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
15 ஆண்டுகள் பழமையான 9 லட்சம் அரசு வாகனங்கள் ஏப்ரல் 1ம் தேதி நிறுத்தப்படும்: நிதின் கட்கரி அறிவிப்பு
அனல் பறக்கும் அரசியல் சூழலில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: நாளை ஒன்றிய அரசு பட்ஜெட் தாக்கல்
பெண் சீடர் பலாத்கார வழக்கு சாமியார் அசாராம் பாபு குற்றவாளி: தண்டனை இன்று அறிவிப்பு
ஒரே வழக்கில் இருவேறு தீர்ப்பு: சென்னை ஐகோர்ட்டுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
தமிழ் தேர்வு விலக்கு கோரிய மனு பிப்.6ல் விசாரணை
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!