யானை தந்தத்துடன் வாலிபர் கைது
2022-08-11@ 15:57:15

மூணாறு: மூணாறு அருகே யானை தந்தத்துடன் வாலிபர் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம், இடுக்கி வனத்துறை சிறப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் மூணாறு அருகே கட்டப்பனை சுவர்ணகிரி பகுதியில் வனத்துறையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வாகனத்தில் வந்த அருண் (35)என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் குமுளியில் உள்ள ஒருவருக்கு, யானை தந்தத்தை விற்பனை செய்வதற்காக, வாகனத்தில் எடுத்து சென்றது தெரிந்தது. இதையடுத்து அவரிடமிருந்த யானை தந்தம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை ரூ.12 லட்சத்திற்கு விலை பேசி, ரூ.2.50 லட்சம் முன்பணமாக பெற்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அருணை கைது செய்த வனத்துறையினர், மேல்விசாரணைக்காக கட்டப்பனை வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். தந்தம் கடத்தல் விவகாரத்தில் மேலும் சிலர் சிக்குவார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
ஐடி நிறுவனங்களில் வேலை தருவதாக கூறி நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து இளம்பெண்களை ரூ.1 லட்சத்திற்கு விற்ற பாலியல் புரோக்கர் அதிரடி கைது: 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
சவுகார்பேட்டையில் அதிகாலை பரபரப்பு சம்பவம் ஆந்திர நகை வியாபாரிகளிடம் ரூ.1.40 கோடி கொள்ளை: போலீஸ் எனக்கூறி காரில் வந்து கைவரிசை
ஆபாச வீடியோவை வாட்ஸ்அப்பில் பரப்பி விடுவோம் என சிறைக்கு சென்று வந்தவர்களிடம் ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது: பாஜ நிர்வாகி என கூறி மோசடிக்கு முயற்சி
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விலை உயர்ந்த கேமரா திருடிய 2 பேர் கைது
முன் விரோத தகராறில் வாலிபரை வெட்டி கொல்ல முயற்சி: 7 பேர் கைது
புறநகர் பகுதிகளில் தொடர் திருட்டு 2 பேர் சிக்கினர்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!